For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புரளி கைது: ஜாமீன் கோரும் திமுக கவுன்சிலர்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

எம்.ஜி.ஆர். நகரில் வெள்ள நிவாரணம் பெற வந்தவர்களிடையே தவறான தகவலைப் பரப்பியதாக கைது செய்யப்பட்டுள்ளதிமுக கவுன்சிலர் தனசேகரன், ஜாமீன் கோரி சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார்.

திமுகவினர் பரப்பிய பொய்யான செய்தியே எம்.ஜி.ஆர். நகரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்குக் காரணம் என முதல்வர்ஜெயலலிதா சமீபத்தில் கூறியிருந்தார். இதுதொடர்பாக நடந்த போலீஸ் விசாரணையிலும் திமுகவினரே வதந்திக்கு காரணம் எனதெரிய வந்ததாக காவல்துறை தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது.

இந் நிலையில் கே.கே நகர் திமுக கவுன்சிலர் தனசேகரனை போலீஸார் திடீரெனக் கைது செய்தனர்.

மேலும் 6 பேரையும் இதுதொடர்பாகப் பிடித்தனர். கைது செய்யப்பட்டுள்ள தனசேகரன் சார்பில் ஜாமீன் கோரி சென்னைதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டது.

இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X