கராத்தே: போலீசின் ஏர்போர்ட் பரபரப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னைக்கு விமானம் மூலம் மாநகராட்சி துணை மேயர் கராத்தே தியாகராஜன் வருவதாக வந்த தகவலால் போலீஸார் மாறுவேடத்தில் குவிக்கப்பட்டு பரபரப்பு ஏற்பட்டது.
பல்வேறு சர்ச்சைகள் மற்றும் வழக்குகளில் சிக்கி தலைமறைவாக இருந்து வரும் சென்னை மாநகராட்சி துணை மேயர் கராத்தேதியாகராஜனைப் போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். ஆனால் எங்கே இருக்கிறார் என்பது தெரியவில்லை.தாயாரின் மறைவுக்குக் கூட அவர் இறுதிச் சடங்குகளை நிகழ்த்த வரவில்லை. இந்த நிலையில், சென்னைக்கு விமானம் மூலம்கராத்தே வருவதாக திடீரென செய்தி பரவியது. மாநகராட்சிக் கூட்டத்தில் கலந்து கொள்ள அவர் வருவதாகவும் தகவல் பரவியது.
இதையடுத்து சிங்கப்பூர், மலேசியா, லண்டன் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சென்னை வரும் விமானங்களை சென்னை போலீஸார்மாறுவேடத்தில் தீவிரமாக கண்காணித்தனர். ஆனால் கராத்தே எதிலுமே வரவில்லை.
நள்ளிரவு வரை விமான நிலையத்திலேயே போலீஸார் சுற்றிக் கொண்டிருந்தனர். ஆனால் கராத்தே வருவது போலத்தெரியாததால், ஏமாற்றத்துடன் திரும்பி விட்டனர்.












Click it and Unblock the Notifications