ஜோதிடம் பார்க்க போனவர் உள்ளே..!
காரைக்குடி:
காற்று வாங்க போனேன்.. ஒரு கவிதை வாங்கி வந்தேன் என்பது மாதிரி எதிர்காலம் பற்றி ஜோதிடம் பார்க்க சென்ற கல்லூரிமாணவர், மாணவியை மானபங்கம் செய்ய முயன்று சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
காரைக்குடி அருகே உள்ள குழிபிறை என்ற ஊரைச் சேர்ந்தவர் பாரதிராஜா (வயது 22). இவர் காரைக்குடியில் உள்ள கல்லூரியில்எம்.காம் முதலாமாண்டு படிக்கிறார். இவர் தனது எதிர்காலத்தை பற்றி தெரிந்து கொள்வதற்காக காரைக்குடி கிணற்றடிகாளியம்மன் கோவில் பகுதியில் உள்ள ஒரு ஜோதிடர் வீட்டுக்கு சென்றார்.வீட்டில் நுழைந்த அவர் குரல் கொடுத்துப் பார்த்தார் யாரும் வரவில்லை. ஆனால் அங்கு 16 வயது பள்ளி மாணவி கட்டிலில்தூங்கிக் கொண்டிருப்பதை பார்த்தார். ஜோதிடம் பார்க்க வந்த பாரதிராஜா வந்த வேலையை மறந்து விட்டு, வீட்டில் யாரும்இல்லை என்பதை தெரிந்து கொண்டு, அந்த மாணவி மீது பாய்ந்து கட்டிப்பிடித்தார்.
மாணவியின் வாயை பொத்தி பலாத்காரம் செய்ய முயன்றார். பாரதிராஜாவின் பிடியில் இருந்து தப்பிய பெண் கூச்சல் போட்டார்.
உடனே அக்கம்பக்கத்து வீட்டார் ஓடிவந்து பாரதிராஜாவை பிடித்தனர். அவரை அடித்து உதைக்கு காரைக்குடி காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து மானபங்கம் செய்ய முயன்றதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு பாரதிராஜா கைதுசெய்யப்பட்டார்.
இச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவி கழுத்தில் நகக்கீறல்கள் ஏற்பட்டு காயமடைந்தார். அவரை தேவக்கோட்டைமருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.












Click it and Unblock the Notifications