இ-மெயில் மிரட்டல்: மதுரை, கோவைக்கு விரையும் தனிப்படை
சென்னை:
நாடாளுமன்றத்திற்கு இ மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த குற்றவாளி மதுரை அல்லது கோவையில்பதுங்கியிருப்பதாக கிடைத்துள்ள தகவலையடுத்து இரு ஊர்களுக்கும் தனிப் படை போலீஸார் விரைகிறார்கள்.
நாடாளுமன்றத்திற்கு இமெயில் மூலம் மிரட்டல் விடுத்தவர்கள் குறித்த விசாரணையில் டெல்லி போலீஸாரும், தமிழகபோலீஸாரும் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பாக நெல்லையில் இரண்டு இன்டர்நெட் மையங்களை சீல்வைத்து அங்கு சோதனைகள் நடத்திய போலீஸாருக்கு எந்த விதத் துப்பும் கிடைக்கவில்லை.இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை 20க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் மீண்டும்டெல்லியிலிருந்து வந்த தனிப்படை போலீஸார், மேலப்பாளையத்தைச் சேர்ந்த 10 பேரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.இதில் சிலமுக்கிய தகவல்கள் கிடைத்தன.
இந்தத் தகவல்கள் மூலம் இ மெயில் அனுப்பிய நபர் கோவை அல்லது மதுரையில் பதுங்கியிருக்கலாம் எனத் தெரிய வந்தது.இந்த முறை கிடைத்த தகவல் சற்று நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருப்பதால், குற்றவாளி எனக் கருதப்படும் நபரைப் பிடிக்கமதுரை மற்றும் கோவைக்கு சென்று தேடுதல் வேட்டை நடத்த டெல்லி மற்றும் தமிழக போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
விரைவில் இரு ஊர்களுக்கும் தனிப்படை போலீஸார் விரைகிறார்கள். மேலும், மதுரை, கோவை போலீஸாரும் இதுதொடர்பாகஅலர்ட் செய்யப்பட்டுள்ளனர். இன்னும் ஓரிரு தினங்களில் குற்றவாளி போலீஸ் பிடியில் சிக்குவான் என்றும் போலீஸார்நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications