For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தம்பதி கொலை: 3 பேருக்கு இரட்டை ஆயுள்

By Staff
Google Oneindia Tamil News

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் வயதான தம்பதியினர் கொலை செய்யப்ட்ட வழக்கில் 3 பேருக்கு இரட்டைஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

பொன்னமராவதியைச் சேர்ந்த ராமநாதன், மீனாட்சி ஆகிய வயதான தம்பதியினர் கடந்த 2002ம் ஆண்டு படுகொலைசெய்யப்பட்டனர். அவர்களது வீட்டிலிருந்து ரூ. 2 லட்சம் மதிப்புள்ள வைரம் மற்றும் தங்க நகைகள் திருடப்பட்டன.

இக் கொலை மற்றும் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக கார்த்திக், சரவணன், அழகுமுத்து, பழனியப்பன் ஆகியோரை போலீஸார்கைது செய்து புதுக்கோட்டை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பாலச்சந்திரகுமார் இன்று தீர்ப்பு வழங்கினார். கார்த்திக், சரவணன், அழகுத்து ஆகியோருக்குதலா 2 ஆயுள் தண்டனைகள் வழங்கப்பட்டன.

கொள்ளையடிப்பதற்கு உடந்தையாக இருந்த பழனியப்பனுக்கு 2 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X