மேலும் 180 கோவில்களில் அன்னதானம்: ஜெ
சென்னை:
தமிழகத்தில் இப்போது 180 கோவில்களில் அமலில் இருக்கும் அரசின் அன்னதானத் திட்டம் வரும் பொங்கலில் இருந்து மேலும்180 கோவில்களுக்கு விரிவாக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
ஜெயலலிதாவுக்கு ராசியான எண்ணான 9 கூட்டுத் தொகை வரும் வகையில் முதல் கட்டமாக 180 கோவில்களில் அன்னதானத்திட்டம் அறிவிக்கப்பட்டது. இப்போது அதே கூட்டுத் தொகையை பிரதிபலிக்கும் வகையில் மேலும் 180 கோவில்களுக்குஅன்னதானத் திட்டம் விரிவாக்கப்படுகிறது.இதன் மூலம் வரும் ஜனவரி 14ம் தேதி முதல் 360 கோவில்களில் (மீண்டும் கூட்டுத் தொகை ஒன்பதே) அன்னதானத் திட்டம்செயல்படும்.
இது தொடர்பாக ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், முதல் கட்டமாக அறிவிக்கப்பட்ட அன்னதானத் திட்டத்துக்குபக்தர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இதற்கு தமிழகம் மட்டுமல்ல, வெளி மாநிலத்தினரிடமும் வரவேற்புகிடைத்துள்ளது.
இத் திட்டத்தை மேலும் பல கோவிலிகளுக்கு விரிவாக்க வேண்டும் என மத நம்பிக்கைக் கொண்ட மக்கள் கோரி வருகின்றனர்.இதனால் அதை மேலும் 180 கோவில்களிலும் செயல்படுத்த முடிவு செய்துள்ளேன்.
இத் திட்டத்தின்படி சென்னை மாவட்டத்தில் 6 கோவில்களிலும், திருவள்ளூர் மாவட்டத்தில் 3 கோவில்களிலும், காஞ்சிபுரத்தில்11 கோவில்களிலும், வேலூரில் 9 கோவில்களிலும், திருவண்ணாமலையில் 3 கோவில்களிலும், சேலத்தில் 11 கோவில்களிலும்,
நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரியில் தலா 3 கோவில்களிலும், ஈரோட்டில் 11 கோவில்களிலும், திருச்சியில் 12 கோவில்களிலும்,புதுக்கோட்டையில் 2 கோவில்களிலும், கரூரில் 3 கோவில்களிலும், பெரம்பலூரில் ஒரு கோவிலிலும்,
தஞ்சாவூரில் 15 கோவில்களிலும், நாகப்பட்டிணத்தில் 4 கோவில்களிலும், விழுப்புரத்தில் 2 கோவில்களிலும், மதுரையில் 9கோவில்களிலும், ராமநாதபுரத்தில் 4 கோவில்களிலும், சிவகங்கையில் 7 கோவில்களிலும்,
தேனியில் 4 கோவில்களிலும், திண்டுக்கல்லில் 6 கோவில்களிலும் விருதுநகரில் 7 கோவில்களிலும், திருநெல்வேலியில் 15கோவில்களிலும், தூத்துக்குடியில் 3 கோவில்களிலும், கன்னியாகுமரி மாவட்டத்தில் 1 கோவிலிலும் இத் திட்டம்அமலாக்கப்படும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.