For Quick Alerts
For Daily Alerts
Just In
மதுரை அருகே தானியங்கி வானிலை நிலையம்
மதுரை:
டிவிஎஸ் விவசாய அறிவியல் ஆய்வு நிறுவனத்தில் வானிலையை துல்லியமாக கணிக்க தானியங்கி வானிலை ஆய்வு நிலையம்அமைக்கப்பட்டுள்ளது.
சுமார் ரூ. 5 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள இந்த தானியங்கி ஆய்வு நிலையம் 23 வகையான வானிலை மாற்றங்களைகணிக்கக் கூடிய தகுதி வாய்ந்தது என்று அறிவியல் ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.சூரிய ஒளியால் இயங்கும் இந்த நிலையம் ஒவ்வொரு 10 நிமிடத்திற்கும் காற்றின் வேகம், திசை, சூரியக் கதிர்களின் சக்தி,தரையின் வெப்ப நிலை, காற்றின் வெப்பம், ஈரப்பதம், மழை அளவு ஆகியவை உள்ளிட்ட பல்வேறு வகை தகவல்களைசேகரிக்கும் திறன் உடையது.
இதன் மூலம் கிடைக்கும் வானிலை நிலவரம் நாங்குநேரி, ராதாபுரம் தாலுகா விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும்.
இதே போன்ற சேவை திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்படவுள்ளதாகஅதிகாரிகள் தெரிவித்தனர்.
Comments
Story first published: Monday, January 2, 2006, 5:30 [IST]