For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஷிப்ட் முறையில் இயங்கும் ஏ.சி.சண்முகம் கல்லூரி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னை கூவம் ஆற்றை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த எம்.ஜி.ஆர். நிகர் நிலைப் பல்கலைக்கழக கட்டடங்கள் பலஇடிக்கப்பட்டு விட்டதால், அந்த வளாகத்தில் உள்ள கல்லூரிகளில் படித்து வரும் மாணவர்களுக்கு ஷிப்ட் முறையில் வகுப்புகள்நடத்தப்படவுள்ளன.

சென்னை மதுரவாயலில் ஏ.சி.சண்கத்திற்குச் சொந்தமான எம்.ஜி.ஆர். நிகர் நிலைப் பல்கலைக்கழகம் உள்ளது. இந்தப்பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். பொறியியல் கல்லூரிக்குச் சொந்தமான பல கட்டடங்கள் கூவம் ஆற்றைஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்தன.

இவற்றை திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் இடித்துத் தள்ளி வருகிறது. தற்போது பாதிக்கும் மேற்பட்ட கட்டடடங்கள் இடித்துத்தள்ளப்பட்டு விட்டன.

இதனால் அக்கல்லூரியில் படித்து வரும் மாணவ, மாணவியருக்கு பாடம் நடத்த வகுப்பறைகள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.கல்லூரி விடுதிகளும் இடிக்கப்பட்டு விட்டதால், அங்கு தங்கியிருந்த மாணவ, மாணவியர் தமிழக வீட்டு வசதி வாரியக்குடியிருப்பில் தாற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந் நிலையில் வகுப்பறைகளுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதால், ஷிப்ட் முறையில் பாடம் நடத்த கல்லூரி நிர்வாகம் முடிவுசெய்துள்ளது. இதன்படி முதல் ஷிப்ட் காலை 8 மணி முதல் பிற்பகல் 12.45 மணி வரையும்,

இரண்டாவது ஷிப்ட் மதியம் 1 மணி முதல் மாலை 5.45 மணி வரையும், இரவு நேரக் கல்லூரி வகுப்புகள் மாலை 5.45 மணிக்குப்பதிலாக இனிமேல் 6 மணிக்குத் தொடங்கி இரவு 9 மணிக்கு முடிவடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஷிப்ட் முறையில் புதன்கிழமை முதல் வகுப்புகள் தொடங்குகின்றன என்றும் கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது. மாணவர்களின்நலன் கருதி விரைவில் புதிய கட்டடங்களைக் கட்டவிருப்பதாகவும் நிர்வாகம் தெரிவித்துள்ளதால் மாணவ, மாணவியர்நிம்மதியடைந்துள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X