தமிழக தொகுதிகளின் பெயர்களை மாற்ற எம்பி, எம்எல்ஏக்கள் எதிர்ப்பு
டெல்லி:
தொகுதி மறு சீரமைப்பு குழு கூட்டத்தில் 42 தமிழக தொகுதிகளின் பெயர்களை மாற்ற எம்பி மற்றும் எம்எல்ஏக்கள் எதிர்ப்புதெரிவித்துள்ளனர்.
தமிழக தொகுதிகளின் மறு சீரமைப்பு குழு கூட்டம் டெல்லியில் தொடங்கியது. கூட்டத்துக்கு மறு சீரமைப்பு குழு தலைவர் குல்தீப்சிங் தலைமை தாங்கினார். தேர்தல் கமிஷனர் கோபாலசுவாமி, குழுவின் சிறப்பு அதிகாரி சாரங்கி, தமிழக தலைமை தேர்தல்அதிகாரி நரேஷ்குப்தா, தமிழக தேர்தல் கமிஷனர் பழனிச்சாமி,துணை உறுப்பினர்களான எம்பிகள் கிருஷ்ணசாமி, சுகவனம், தங்கபாலு, தனராஜ், எம்எல்ஏக்கள் விஜயபாஸ்கர், சிவசாமி,தமிழ்மொழி, போளூர் வரதன், பொன்முடி ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழுப்புரம், நாமக்கல், ஈரோடு, கோவை, நீலகிரி மாவட்டங்கள் தொடர்பாக விவாதம் நடைபெற்றது. சென்னை, திருவள்ளூர்,காஞ்சிபுரம் மாவட்டம் தொடர்பாக கடந்த மாதம் ஆய்வு செய்யப்பட்டதையும், பொது மக்களிடமும், கட்சித் தொண்டர்களிடமும்பெற்ற கருத்துக்களையும் எம்பி, எம்எல்ஏக்கள் இந்தக் கூட்டத்தில் தெரிவித்தனர்.
சில தொகுதிகளின் இடையில் தொகுதிக்கு சம்பந்தம் இல்லாத வேறு ஊர்களும் புகுத்தப்பட்டது பெரும் குழப்பத்தை ஏற்படுத்திஉள்ளது. இது நடைமுறையில் சாத்தியமில்லாதது என்று அவர்கள் கருத்துத் தெரிவித்தனர்.
மறுசீரமைப்பு குழு தயாரித்த வரைவு திட்டத்தின்படி ஏற்கனவே உள்ள 42 சட்டசபை தொகுதிகளின் பெயர்கள்மாற்றப்பட்டுவிட்டன. இத் தொகுதிகளின் பெயர்களை மாற்ற எம்பி, எம்எல்ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பழையபெயர்களே நீடிக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.