செயல்படத் தொடங்கியதுஆக்கிரமிப்பு பல்கலை
சென்னை:
ஆக்கிரமிப்பு காரணமாக இடிக்கப்பட்ட எம்.ஜி.ஆர் நிகர்நிலைப் பல்கலைக் கழக வளாகத்தில் உள்ள கல்லூரிகள் இன்று முதல்செயல்படத் தொடங்கின. ஆனால் கட்டட இடிபாடுகளைத் தாண்டி வகுப்புகளுக்கு செல்ல மாணவர்கள் பெரும் சிரமப்பட்டனர்.
சென்னை மதுரவாயலில் கூவம் ஆற்றை பெருமளவில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த எம்.ஜி.ஆர். நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தின் பொறியியல் கல்லூரி கட்டடங்கள், விடுதிகள் ஆகியவற்றை அதிகாரிகள் இடித்துத் தள்ளியுள்ளனர்.பெரும்பாலான கட்டடங்கள் இடிக்கப்பட்டு விட்ட நிலையில் எஞ்சியுள்ள கட்டடங்களில் ஷிப்ட் முறையில் வகுப்புகளை நடத்தபல்கலைக்கழக நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.இதையடுத்து இன்று முதல் கல்லூரிகள் இயங்கத் தொடங்கின. முதல் ஷிப்ட் வகுப்புகளுக்கு இன்று காலையில் மாணவ,மாணவியர் கல்லூரிக்கு வந்த போது, பெரும் குவியலாக கிடந்த கட்டட இடிபாடுகளைத் தாண்டி வகுப்புகளுக்குச் செல்ல பெரும்சிரமப்பட்டனர். குறிப்பாக மாணவிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
கூவம் ஆற்றைத் தாண்டி கல்லூரிகளுக்கு வருவதற்காக கல்லூரி நிர்வாகம் ஒரு பாலத்தைக் கட்டியிருந்தது. அந்தப் பாலம்இடிக்கப்பட்டு விட்டதால் ஆற்றைக் கடந்து வர முடியாமல், நீண்ட தூரம் சுற்றி கல்லூரிக்கு வர வேண்டியிருப்பதாகமாணவர்கள் வெறுப்புடன் கூறினர்.
விரைவில் புதிய கட்டடங்களை (முறையாக) கட்டினால் மட்டுமே மாணவ, மாணவியருக்கு பெரும் நிம்மதி என்றும்மாணவர்கள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications