For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சினிமா பாணி என்கெளண்டர்: நீதிபதி வேதனை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சேலத்தில் நடந்துள்ள போலீஸ் என்கெளண்டர் சினிமா பாணியில் உள்ளது, இது வேதனை அளிக்கிறது என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி. ஷா கூறினார்.

சேலம் மாவட்டம் மேட்டூர் தாலுகா கோவிலூர் கிராமத்தை சேர்ந்த கர்ணன் கடந்த 2004ம் ஆண்டு போலீஸ் என்கெளண்டரில்சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவம் அப்போதைய எஸ்பி பொன் மாணிக்கவேலுவின் தூண்டுதலின் பேரில் நடந்துள்ளது.

இதையடுத்து சிபிஐ விசாரணை வேண்டும் என்று கர்ணனின் மனைவி செட்டியம்மாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.டி.தினகரன் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டார். அதை எதிர்த்து தமிழக அரசுமற்றும் பொன் மாணிக்கவேல் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து தடை வாங்கினர்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் ஆகியோர் முன்பு வந்தது. இருதரப்புவாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, இந்த போலீஸ் என்கெளண்டர் சினிமாவில் வருவது போல் உள்ளது. இதுமிகவும் வேதனை அளிக்கிறது என்று கருத்து தெரிவித்தார்.

மேலும் விசாரணையை வரும் 20ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X