புலிகள் கண்ணிவெடியில் சிக்கி 10 ராணுவத்தினர் பலி
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
இலங்கையின் வவுனியா மாவட்டத்தில் புலிகளின் கண்ணி வெடியில் சிக்கி 10 கடற்படையினர் பலியாயினர். மேலும் 12 பேர்படுகாயமடைந்தனர்.தமிழர் பகுதிகளில் இலங்கை ராணுவம் அட்டூழியம் செய்ய ஆரம்பித்துள்ள நிலையில் மீண்டும் இந்தக் கண்டிவெடித் தாக்குதல்நடந்துள்ளது.
தமிழர்களின் வீடுகளுக்குள் நுழைந்த இலங்கை ராணுவத்தினர் அடாவடி செய்து வருவதால் அங்கிருந்து மக்கள் தப்பிஅகதிகளாக தமிழகம் வர ஆரம்பித்துள்ளனர்.
இந் நிலையில் வவுனியாவின் செட்டிக் குளம் பகுதியில் கடற்படையினர் சென்ற வாகன வரிசை புலிகளின் கண்ணிவெடியில்சிக்கியது. இதில் அந்த வாகனங்கள் வெடித்துச் சிதறியதில் 8 பேர் அந்த இடத்திலேயே பலியாயினர். மேலும் இருவர்மருத்துவமனையில் பலியாயினர்.
மேலும் 12 பேர் படுகாயமடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications