ரவிசங்கர் பெயர் நோபல் பரிசுக்குப் பரிந்துரை
பெங்களூர்:
அமைதிக்கான நோபல் பரிசுக்கு இந்தியாவைச் சேர்ந்த பண்டிட் ரவிசங்கரின் பெயரை அமெரிக்க எம்.பி. ஒருவர்பரிந்துரைத்துள்ளார்.
வாழும் கலை குறித்த போதனையை உலகம் முழுவதும் நடத்தி வருபவர் ரவிசங்கர். உலகம் முழுவதும்பல்லாயிரக்கணக்கானோர் இவரது வாழும் கலையைப் பின்பற்றி வருகின்றனர். ஆர்ட் ஆப் லிவிங் பவுண்டேஷன் என்ற பெயரில்அமைப்பு ஒன்றையும் ரவிசங்கர் நடத்தி வருகிறார்.இந்த நிலையில் ரவிசங்கருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என அமெரிக்காவின், ஜனநாயகக் கட்சி எம்.பிஜோசப் க்ரெளலி, நோபல் பரிசுக் குழுவுக்குப் பரிந்துரைத்துள்ளார்.
இது தொடர்பாக நோபல் பரிசுக் குழுவுக்கு அவர் அனுப்பியுள்ள பரிந்துரைக் கடிதத்தில், நியூயார்க் இரட்டை கோபுரத்தாக்குதலுக்குப் பிறகு மனரீதியாக பாதிக்கப்பட்டிருந்த நியூயார்க் மக்களுக்கு வாழும் கலை குறித்து, மனதைவலிமைப்படுத்துவது எப்படி என்பது குறித்தும் போதித்தார் ரவிசங்கர்.
கொசவோ அமைதி உடன்படிக்கை ஏற்படவும் ரவிசங்கர் உதவியுள்ளார். காஷ்மீர் மக்களுக்கும் அமைதி குறித்து போதித்துள்ளார்.உலகம் முழுவதும் அவரது வாழும் கலையை பல்லாயிரக்கணக்கானோர் பின்பற்றுகின்றனர்.
வன்முறை இல்லாத உலகம், மனது குறித்து பாடுபட்டு வருகிறார் ரவிசங்கர். எனவே அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசுவழங்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார் ஜோசப்.












Click it and Unblock the Notifications