வளர்ப்பு மகன் சுதாகரன் மீது பாலியல் புகார்
சென்னை:
முதல்வர் ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன் மீது பெண் பைனான்சியர் ஒருவர் பாலியல் புகார் கூறி பரபரப்பைஏற்படுத்தியுள்ளார்.
முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் உறவினர் சுதாகரன். ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகனான சுதாகரன் மீதுகேரளாவைச் சேர்ந்த பெண் பாைனன்சியர் பிரியா நாயர் என்பவர் பரபரப்பு புகார் கொடுத்துள்ளார்.25 வயதாகும் பிரியா நாயர் திருமணமானவர், குழந்தைகள் கிடையாது. பிரியாவும், அவரது கணவரும் சேர்ந்துதிரைப்படங்களுக்கு பைனான்ஸ் செய்து வருகிறார்கள். தற்போது நண்பனின் காதலி என்ற படத்தை பிரியா சொந்தமாகதயாரித்து வருகிறார்.
இவர் சென்னை மாநகர ஆணையர் நடராஜிடம் கொடுத்துள்ள புகாரில், நான் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வி.என்.சுதாகரனை திருவண்ணாமலையில் வைத்து சந்தித்தேன். எனது படத்தை இயக்கும் இயக்குநர் தான் சுதாகரனை அறிமுகப்படுத்திவைத்தார்.
இந்த சந்திப்புக்குப் பிறகு தினசரி இரவு 12 மணிக்கு மேல் சுதாகரன் என்னைத் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசுவார்.முதலில் சாதாரணமாக பேச ஆரம்பித்த அவர் போகப் போக ஆபாசமாகவும், அறுவெறுப்பு தரும் வகையிலும் பேசத்தொடங்கினார்.
தினசரி நள்ளிரவுக்கு மேல் பேசி செக்ஸ் தொல்லை கொடுக்க ஆரம்பித்தார் பொறுத்துப் பார்த்த நான் ஒரு நாள் அவர் என்னுடன்5 மணி நேரத்திற்கும் மேலாக ஆபாசமாக பேசியதை டேப் செய்து வைத்தேன். இதையடுத்து தற்போது புகார் கொடுத்துள்ளேன்.சுதாகரன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்தப் புகார் குறித்து மயிலாப்பூர் துணை ஆணையர் மூலம் விசாரிக்கச் சொல்வதாக நடராஜ் தன்னிடம் உறுதியளித்ததாக பிரியாநாயர் தெரிவித்தார்.
பிரியா நாயரின் இந்த பரபரப்புப் புகார் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.