அசாமில் தீவிரவாதிகள் தொடர் வெடி குண்டு தாக்குதல்

Subscribe to Oneindia Tamil

கெளஹாத்தி:

அசாமில் தொடர் வெடி குண்டு தாக்குதல் நடத்தி தீவிரவாதிகள் கேஸ் பைப் லைன் மற்றும் மின்சார நிலையங்களைதகர்த்துள்ளனர்.

அசாமில் உல்பா தீவிரவாதிகள் செயல்பட்டு வருகிறார்கள். அடிக்கடி நாச வேலைகளில் ஈடுபட்டு அவர்கள் குடியரசுதினவிழாவை தடுக்கும் முயற்சி செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று இரவு அசாமில் தீவிரவாதிகள் தொடர் குண்டு வெடிப்பு தாக்குதலை நடத்தினர். வடக்கு லட்சுமிபூர்மாவட்டத்தில் மின்சார நிலையங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

அங்கு போலீசார் மீது வெடிகுண்டுகள் வீசி தாக்குதல் நடத்தியதில் 4 போலீசார் காயம் அடைந்தனர். குண்டு வீச்சில் மின்சாரநிலையங்கள் பயங்கரமாக தீப்பற்றி 20 மீட்டர் முதல் 25 மீட்டர் உயரம் வரை எரிந்தது.

அதே போல் அசாம் மாநில அரசுக்கு சொந்தமான கேஸ் பைப் லைன்களையும் தீவிரவாதிகள் குண்டு வைத்து தகர்த்தனர்.வீடுகளுக்கு இந்த குழாய் மூலமாகத் தான் இயற்கை எரிவாயு சப்ளை செய்யப்பட்டு வந்தது.

இந்த பைப் லைன்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்து தீப்பற்றி எரிந்தது. தீவிரவாதிகளின் இந்த தொடர் தாக்குதலை அடுத்துஅசாமில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+