கரூர் அருகே கார் விபத்து: 2 பேர் பலி
கரூர்:
கரூர் அருகே பாலத்தின் மீது கார் மோதி பள்ளி மாணவி உள்பட 2 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
திருச்சி மாவட்டம் அருகே மணப்பாறையை அடுத்த கருப்பூர் மாதானூரை சேர்ந்த முனியாண்டி (வயது 40) தமது குடும்பத்துடன்கரூர் அருகே உள்ள புன்னம் சத்திரத்தில் தங்கியிருந்து கல்குவாரியில் வேலை பார்த்து வருகிறார்.முனியாண்டியின் சகோதரர் வீரமலையும் அங்கு வேலை பார்த்து வருகிறார். முனியாண்டி சொந்த ஊருக்கு செல்ல முடிவு செய்துஅதன் படி ஒரு வாடகை காரை அமர்த்தி மணப்பாறைக்கு வந்துக் கொண்டிருந்தார்.
காரில் முனியாண்டி, மனைவி சின்னப்பொண்ணு, மகள் ஜெயலட்சுமி (வயது 14), மகன் முத்துக் குமார், சகோதரன் வீரமலை,உறவினர் வேலுச்சாமி ஆகியோர் இருந்தனர்.
இவர்கள் சென்றுகொண்டிருந்த கார் தரங்கம்பாடி அருகே வந்தபோது கார் கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த தரங்கம்பாடிவாய்க்கால் பாலத்தின் தடுப்பு சுவர் மீது மோதியது. மோதிய வேகத்தில் கார் வாய்க்காலுக்குள் பாய்ந்து அப்பளம் போல்நொறுங்கியது.
இந்த சம்பவத்தில் 8ம் வகுப்பு படிக்கும் மாணவி ஜெயலட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற 6 பேர் ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சிந்தாமணிபட்டி போலீசார் விரைந்துசென்று உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 6 பேரையும் மருத்துவமனையில் சேர்த்தார்.
மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் வேலுச்சாமி பரிதாபமாக உயிரிழந்தார்.












Click it and Unblock the Notifications