கம்பியில்லா தொலை பேசியகம்: தொடங்கி வைத்தார் தயாநிதி மாறன்

Subscribe to Oneindia Tamil

மதுரை:

தமிழகத்தின் 9 மாவட்டங்களை இணைக்கும் கம்பியில்லா தொலைபேசியகத்தை மதுரையில் நடந்த நிகழ்ச்சியில் மத்தியதொலைத் தொடர்புத் துறை அமைச்சர் தயாநிதி மாறன் தொடங்கி வைத்தார்.

1 லட்சம் தொலைபேசி இணைப்புகளைக் கொடுக்கக் கூடிய திறன் படைத்த கம்பியில்லா தொலைபேசி இணைப்பகம் மதுரையில்ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த தொலைபேசி இணைப்பகம் மூலம் மதுரை, காரைக்குடி, விருதுநகர், நெல்லை, திருச்சி, நாகர்கோவில், தூத்துக்குடி,தஞ்சாவூர், கும்பகோணம் தொலைத் தொடர்பு மாவட்டங்களில் 1 லட்சம் கம்பியில்லா தொலைபேசி இணைப்புகள்,பிராட்பேண்ட் இன்டர்நெட் இணைப்புகளை உடனடியாக வழங்க முடியும்.

இதன் தொடக்க விழா மதுரையில் நடந்தது. எல்லீஸ் நகர் தொலைபேசி இணைப்பகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் மத்தியஅமைச்சர் தயாநிதி மாறன் தொலைபேசி இணைப்பகத்தைத் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மதுரை எம்.பி. மோகன், திமுகஎம்.பி. சண்முகசுந்தரம், மதுரை மாநகராட்சி மேயர் செ.ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+