விமானத்தில் ஈவ்-டீசிங்: 3 பேர் வெளியேற்றம்
சென்னை:
சென்னை விமான நிலையத்தில் இருந்து மும்பைக்கு புறப்பட தயாராக இருந்த ஜெட் ஏர் வேஸ் விமானத்தில் 3 பயணிகள் குடிபோதையில் பெண் பயணியிடம் தவறாக நடந்ததால் விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்டனர்.
விமான நிலையத்தில் இருந்து மும்பை புறப்பட தயாராக இருந்த ஜெட் ஏர் வேஸ் விமானத்தில் குமார், கெளதம், ஜாய்ஸ் என்ற 3பயணிகள் குடிபோதையில் இருந்தனர். விமானத்தில் இருந்த பெண் பயணியை கிண்டல் செய்துள்ளனர்.உடனே அந்தப் பெண் பயணி விமானப் பணிப் பெண்ணிடம் இது குறித்து புகார் தெரிவித்தார். விமானப் பணிப் பெண் அந்த 3பயணிகளையும் அமைதியாக அமரும்படி கூறினார். ஆனால் அந்த 3 பேரும் விமானப் பணிப் பெண்ணிடமும் தவறாக நடந்துகொண்டனர்.
இதனால், விமானப் பணிப் பெண் பைலட்டிடம் இது குறித்து தெரிவித்தார். இதையடுத்து பைலட் குடி போதையில் இருந்த குமார்,கெளதம், ஜாய்ஸ் ஆகிய 3 பேரையும் விமானத்தை விட்டு கீழே இறங்கும் படி கேட்டுக் கொண்டார். ஆனால் அந்த 3 பயணிகளும்இதை காதில் வாங்கிக் கொள்ளவில்லை.
இந்த நிலையில் பைலட் கீழே இருந்த விமான ஊழியர்களிடம் இது குறித்து தகவல் கொடுத்தார். உடனே, விமான ஊழியர்கள்விமானத்தில் ஏறி குடிபோதையில் தகராறு செய்த 3 பயணிகளையும் வலுக் கட்டாயமாக விமானத்தை விட்டு இறக்கிபோலீசாரிடம் ஒப்படைத்தனர்.
குடிபோதையில் தகராறு செய்த 3 பயணிகள் மீதும் எழுத்துப் பூர்வமான புகார் இல்லாததால், போலீசார் அவர்களை கடுமையாகஎச்சரித்து வெளியே அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் ஜெட் ஏர்வேஸ் விமானம் காலதாமதமாக புறப்பட்டு சென்றது.
மூவருமே கேரளத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிகிறது.