போலீஸின் குண்டாஸ் மிரட்டல்: கராத்தே ஆதரவு கவுன்சிலர் பகீர் புகார்
சென்னை:
சென்னை மாநகராட்சிக் கூட்டத்தில் கலந்து கொண்டால் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து விடுவோம் என போலீஸார்மிரட்டுவதாக கூறி சென்னை மாநகர காவல்துறை ஆணையர் நடராஜிடம், கராத்தே தியாகராஜனின் ஆதரவாளரான ஒருகவுன்சிலர் புகார் கொடுத்துள்ளார்.
ஓட்டேரி அதிமுக கவுன்சிலராக இருந்தவர் பன்னீர்செல்வம். தலைமறைவாக உள்ள துணை மேயர் கராத்தே தியாகராஜனின்ஆதரவாளர் இவர். மாநாகராட்சி விழாவில் தனது பெயரைப் போடாததை எதிர்த்து மாநகராட்சி வளாகத்தில் தீக்குளிக்கமுயற்சித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர். இதைத் தொடர்ந்து பன்னீர்செல்வம் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார்.இந் நிலையில் இன்று சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு வந்த பன்னீர்செல்வம் ஆணையர் நடராஜிடம் புகார்ஒன்றைக் கொடுத்தார். இதுகுறித்து பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில்,
போலீசாரின் மிரட்டலால் தான் கடந்த 2 மாநகராட்சிக் கூட்டங்களில் நான் கலந்து கொள்ளவில்லை. தற்போது அடுத்த மாதம்நடைபெறவுள்ள கூட்டத்திலும் கலந்து கொள்ள விடாமல் போலீஸார் தடுக்கிறார்கள்.
தொடர்ந்து 3வது முறை கூட்டத்தில் கலந்து கொள்ளாவிட்டால் எனது கவுன்சிலர் பதவி பறிபோய் விடும். இதனால்தான்போலீஸார் என்னைத் தடுக்கப் பார்க்கிறார்கள். மீறி கலந்து கொண்டால், குண்டர் சட்டத்தில் கைது செய்து உள்ளே தள்ளிவிடுவோம் என மிரட்டுகிறார்கள்.
எனவே நான் கூட்டத்திற்கு சென்று வீடு திரும்பும் வரை பாதுகாப்பு கொடுக்கக் கோரி நட்ராஜிடம் மனு அளித்துள்ளேன் என்றார்பன்னீர் செல்வம்.












Click it and Unblock the Notifications