For Daily Alerts
Just In
அரசு அலுவலர் மாநாடு: ஜெ. பங்கேற்பு
சென்னை:
சென்னையில் வருகிற 8ம் தேதி நடைபெறவுள்ள அரசு அலுவலர் ஒன்றிய மாநில மாநாடு மற்றும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்பொது மாநாட்டில் முதல்வர் ஜெயலலிதா பங்கேற்கவுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 3ம் தேதி சென்னையில் தமிழகஅரசு அலுவலர் ஒன்றிய மாநில மாநாடு மற்றும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பொது மாநாடு நடைபெறுவதாக இருந்தது.இதில் கலந்து கொள்வதாக முதல்வர் ஜெயலலிதா ஒப்புதல் அளித்திருந்தார்.
இந்த நிலையில் தொடர்ந்து பெய்து வந்த கனமழை காரணமாக இந்த மாநாடு தள்ளி வைக்கப்பட்டது. தற்போது வருகிற 8ம் தேதிபுதன்கிழமை இந்த மாநாடு சென்னையில் நடைபெறும். இதில் முதல்வர் ஜெயலலிதா கலந்து கொள்ளவுள்ளார் என்று அதில்தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Story first published: Wednesday, February 1, 2006, 5:30 [IST]