பாலாற்று அணை: ஆந்திரா படுவேகம்
குப்பம்:
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் குப்பம் அருகே பாலாற்றின் குறுக்கே அணை கட்டும் திட்டத்திற்கு ஆந்திர அரசு ரூ. 30 கோடிஒதுக்கீடு செய்துள்ளது. விரைவில் அணை கட்டும் பணி தொடங்கும் எனவும் தெரிகிறது.குப்பம் அருகே கணேசபுரத்தில் பாலாற்றின் குறுக்கே அணை கட்ட ஆந்திர அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான பூர்வாங்கப்பணிகள் ஏற்கனவே தொடங்கி விட்டன. இத்திட்டத்திற்கு தமிழகத்தில் பெரும் எதிர்ப்பு எழுந்துள்ளதைப் பொருட்படுத்தாமல்அடுத்தடுத்து காரியங்களை ஆற்றி வருகிறது ஆந்திர அரசு.
சர்ச்சைக்குரிய கணேசபுரம் அணைக்கட்டுப் பகுதிக்கு வந்த ஆந்திர வேளாண்துறை அமைச்சர் ரகுவீர ரெட்டி செய்தியாளர்களிடம்கூறுகையில், இத்திட்டத்திற்காக ரூ. 30 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் அணை கட்டும் பணியைத் தொடங்கவுள்ளோம்.
இத்திட்டத்தை தமிழக அரசு எதிர்ப்பதில் நியாயம் இல்லை. இது ஆந்திர அரசின் உரிமை. இத்திட்டத்தை எதிர்த்து தமிழக அரசுஉச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால் அதை நாங்களும் சந்திக்கத் தயாராக இருக்கிறோம்.
எங்களை நம்பி ஓட்டுப் போட்ட மக்களின் நலனை நாங்கள் புறக்கணிக்க முடியாது. ஆனால் இப்பிரச்சினையை தமிழக அரசுஅரசியலாக்க முயற்சிக்கிறது என்றார் ரகுவீர ரெட்டி.
பாலாறு அணை: தமிழ-ஆந்திர மோதல் தீவிரம்
பாலாறு பாழான துயர வரலாறு- பழ.நெடுமாறன்