வைகோவிடம் இருந்து பதில் இல்லை: கருணாநிதி
சென்னை:
திமுக, மதிமுக இடையே புகைந்து கொண்டிருந்த மோதல் வெளிப்படையாகவே வெடித்துள்ளது.
தாங்கள் கோரும் தொகுதிகளின் பட்டியல் குறித்து மதிமுக இன்னும் கடிதம் தரவில்லை என்றும், மதிமுகவின்கொள்கைப் பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத்தின் பேச்சு கூட்டணிக்கு உலை வைப்பதாக இருப்பதாகவும் திமுகதலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.நிருபர்களிடம் பேசிய அவர்,
வைகோவுடன் காளிமுத்து பேசி வருவதாக வெளியாகும் தகவல்களுக்கு விளக்கம் கேட்டு ஆற்காடு வீராசாமிவெளியிட்ட அறிக்கைக்கு மதிமுகவிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.
தொகுதிகளின் பட்டியல் குறித்தும் அவர்கள் கடிதம் ஏதும் தரவில்லை. மதிமுக கொள்கைப் பரப்புச் செயலாளர்பதவியில் இருப்பவர் திமுக குறித்து மிக மோசமாக பேசியிருக்கிறார்.
கூட்டணியில் இருந்து மதிமுக ஒதுங்குகிறதா என்பதை உங்கள் முடிவுக்கே விட்டுவிடுகிறேன். பிரதமரிடம் வைகோஎன்ன பேசினார் என்று எனக்கு ஏதும் தெரியாது.
மத்தியில் கூட்டணியை ஆதரிப்பது, மாநிலத்தில் அதிமுக கூட்டணிக்குப் போவது என்று பிரதமரிடம் அவர் ஏதும்சொன்னாரா என்று எனக்கு ஏதும் தெரியாது.
மதிமுக விஷயத்தில் இதற்கு மேல் எனக்கு ஏதும் சொல்லத் தெரியவில்லை. அதிமுகவை ஆதரிப்பது என்று மதிமுகஒரு முடிவை எடுத்தால் நாங்களும் எங்கள் முடிவினை எடுப்போம்.
கடந்த ஜனவரி 26ம் தேதியே வைகோவை எனது இல்லத்துக்கு அழைத்து ஒன்றரை மணி நேரம் பேசினேன்.அப்போதே தொகுதிகளின் எண்ணிக்கை கூட முடிவு செய்யப்பட்டது. ஒன்றிரண்டை குறைத்துக் கொள்ளுங்கள்என்று கூட நான் அப்போது கேட்டுக் கொண்டேன்.இதன் பிறகு பத்திரிக்கைகளில் பல வதந்திகளும் ஹேஸ்யங்களும் வந்ததே தவிர வேறு எந்தத் தகவலும்மதிமுகவிடம் இருந்து கிடைக்கவில்லை. துரைமுருகன் கூட வைகோவை சந்தித்துப் பேசினார். அப்போதும்திட்டவட்டமான பதில் கிடைக்கவில்லை.
கவிஞர் வைரமுத்து மூலமாக முயற்சி எடுக்கப்பட்டும் பலன் கிடைக்கவில்லை. வைகோ விஷயத்தில் கெடு எதையும்நாங்கள் நிர்ணயிக்கப் போவதில்லை. இப்போது பந்து அவர் பக்கம் தான் உள்ளது என்றார் கருணாநிதி.