கப்பல் பலி: தமிழக மாலுமி பஹ்ரைனில் அடக்கம்
Subscribe to Oneindia Tamil
துபாய்:
கப்பலில் செல்லும்போது பலியான தமிழக மாலுமியின் உடல் பஹ்ரைனில் அடக்கம் செய்யப்பட்டது.
கடந்த 3 மாதங்களுக்கு முன் தூத்துக்குடியில் இருந்து புறப்பட்ட கப்பலில் சென்றார் மாலுமியான சூசை இருதயராஜ்.வளைகுடா பகுதியில் பல்வேறு நாடுகளுக்குச் சென்ற அந்தக் கப்பல் இராக்கில் இருந்து துபாய்க்குச் சென்றுகொண்டிருந்தது.அப்போது சூசைக்கு நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டது. கப்பலிலேயே துவண்டு போன அவருக்கு சிகிச்சைஅளிக்கப்பட்டும் பலனளிக்கவில்லை. கடந்த சனிக்கிழமை பஹ்ரைன் எல்லை அருகே அந்தக் கப்பல் சென்றுகொண்டிருந்தபோது சூசை உயிரிழந்தார்.
இதையடுத்து தமிழகத்தில் உள்ள அவரது குடும்பத்தினருக்குத் தகவல் தரப்பட்டது. அவரது உடலை தமிழகம்கொண்டு வர அதிக செலவு பிடிக்கும் என்பதாலும், உடலை பஹ்ரைனில் அடக்கம் செய்ய அந் நாட்டு அதிகாரிகள்முன் வந்ததாலும், அங்கேயே இறுதிச் சடங்கை செய்ய முடிவு செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து படகு மூலம் சூசையின் உடல் பஹ்ரைனுக்குக் கொண்டு செல்லப்பட்டு அடக்கம்செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications