பிளாப் ஆன பாஜக மக்கள் தரிசன யாத்திரை
சென்னை:
முன்னாள் பாஜக மத்திய அரசின் சாதனைகளை மக்களிடம் விளக்க தமிழகத்தில் பாஜக நடத்தி வரும் மக்கள்தரிசன யாத்திரைகள் முழு பிளாப் ஆகியுள்ளன.
இந்த யாத்திரையை நடத்தும் தலைவர்களின் பின்னால் செல்வதற்கு அதிகபட்சம் 10 பேர் கிடைப்பதே அரிதாகஉள்ளது. அதிலும் மிக மோசமாக உள்ளது காரைக்குடி எம்எல்ஏவும் மாநில பொதுச் செயலாளருமான எச்.ராஜாநடத்தி வரும் யாத்திரையில் 4,5 பேர் மட்டுமே உடன் செல்கின்றனர்.
![]() |
| வெறும் 4 பேர் மத்தியில் பேசும் ராஜா |
யாத்திரை செல்லும் வழியில் அவர் பேசுவதற்கு மைக் செட் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், யாருமேகூட்டத்துக்கு வராததால் பல இடங்களில் தனது பேச்சை ரத்து செய்துவிட்டு நடந்தார் ராஜா.
அரவக்குறிச்சியில் மட்டும் பேசிய அவர், முதல்வர் ஜெயலலிதாவுக்கு தமிழக மக்களுக்கு என்ன செய்யலாம் என்றசிந்தனையே இல்லை. சசிகலாவுக்கு என்ன செய்யலாம் என்று தான் எப்போதும் யோசிக்கிறார்.
மத்திய அரசையும் மந்திரிகளையும் குறை சொல்வதும் அவர்கள் தன்னை வந்து பார்க்கவில்லை என்று புகார்சொல்வதுமாக பொழுது போக்கி, ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார் என்றார்.
முன்னதாக பூந்தமல்லியில் நடந்த மக்கள் தரிசன யாத்திரையில் பேசிய பாஜக தேசிய பொதுச் செயலாளர்இல.கணேசன்,
நாத்திகம் பேசி ஆட்சியைப் பிடித்த காலமெல்லாம் மலையேறிவிட்டது. இப்போது ஆத்திகம் பேசினால் தான்பதவிக்கு வர முடியும் என்ற நிலை வந்துவிட்டது. இனி யாராவது இந்துத் துறவிகளையோ,சங்கராச்சாரியார்களையோ இழிவுபடுத்திப் பேசினால், அவன் வீட்டுக்குச் செல்வதற்குள் இரு கைகளும்இருக்காது.
ஜெயலலிதா-சசிகலா குரூப் சாராய கம்பெனி நடத்துவது வெட்ட வெளிச்சமாகிவிட்டது. ஜெயலலிதாவுக்குயாருமே கிடையாது. யாருக்காக இப்படி சொத்து சேர்க்கிறார்.
தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை. இந்தத் தேர்தலில் எதிர்க் கட்சியாக உட்காரவையுங்கள். அடுத்த தேர்தலில் ஆட்சியை அமைக்கும் நிலைக்கு வந்துவிடுவேம் என்றார் இல.கணேசன்.
![]() |
| முதலில் வைக்கப்பட்ட பேனரும் (இடது) மாற்றப்பட்ட பேனரும் |
முன்னதாக சங்கராச்சாரியாரை விலங்கிட்டு அழைத்துச் செல்வதைப் போல காஞ்சிபுரத்தில் வைக்கப்பட்டவிளம்பரத்தை, பாஜகவின் எச்சரிக்கையைத் தொடர்ந்து அதிமுகவினர் அகற்றிவிட்டு வேறு ஒரு விளம்பரத்தைவைத்தனர்.














Click it and Unblock the Notifications