கட்சி உண்டு; கொடி இல்லை!
சிவகாசி:
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே விளாம்பட்டி கிராமத்தில் அனைத்துக்கட்சிகளுக்கும் கிளை இருந்தாலும் ஒரு கட்சிக் கொடியைக் கூட பார்க்க முடியாததுஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.
இது தேர்தல் காலம். பொது இடத்தில் கண்ணை மூடிக் கொண்டு ஐந்து நிமிடம்அமைதியாக நின்று கொண்டிருந்தால், முதுகில் பிரசாரத்தை எழுதி வைத்துவிடுவார்கள். அந்த அளவுக்கு பிசியான இந்த நேரத்தில், ஒரு கிராமத்தில், அரசியல்கட்சியின் வாசனை கூட விசாமல் பெருத்த அமைதி நிலவுவது ஆச்சரியமானவிஷயம்தான்.சிவகாசி சட்டசபைத் தொகுதிக்குட்பட்ட கிராமம் விளாம்பட்டி. இந்தக் கிராமத்தில்அனைத்துக் கட்சிகளுக்கும் பிரதிநிதித்துவம் உண்டு. இங்கு மொத்தம் 4000 பேர்வசிக்கிறார்கள்.
விளாம்பட்டியின் விசேஷம் என்னவென்றால் ஒரு கட்சியின் கொடியையும் இங்குபார்க்க முடியாது. மகாத்மா காந்தியின் சிலை மட்டுமே இங்கே உள்ளது. வேறு எந்தத்தலைவரின் சிலையையும் இங்கே பார்க்க முடியாது.
கட்சிக் கொடிக் கம்பம் வைக்கக் கூடாது என்று ஊர்க் கட்டுப்பாடு போடப்பட்டுள்ளது.அதை இதுவரை யாரும் மீறி நடந்ததில்லையாம். முன்பு ஒருமுறை அரசியல்கட்சிகளைச் சேர்ந்தவர்களிடையே பெரும் மோதல் ஏற்பட்டு சாதிக் கலவரம் வரைஅது போய் விட்டதாம்.
அன்று முதல் கட்சி வாசனையே இங்கு கூடாது என்று ஊர் மக்கள் முடிவு செய்து இந்தகட்டுப்பாட்டை கடைப்பிடித்து வருகின்றனர். கட்சிக் கொடிகள், ஜாதித்தலைவர்களுக்குத்தான் இங்கு அனுமதி இல்லையே தவிர அத்தனை பேரும்தவறாமல் ஓட்டுப் போட்டு விடுவார்களாம்.
ஆரோக்கியமான விஷயமா இருக்கே..!












Click it and Unblock the Notifications