For Daily Alerts
Just In
லீக்: பெண் போலீஸ் உள்பட 8 பேர் கைது
சென்னை:
காவலர் தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரத்தில் பெண் காவலர் உள்பட 8 பேரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்துள்ளனர்.கடந்த ஆண்டு இரண்டு முறை நடந்த காவலர் தேர்வின்போது வினாத்தாள்கள் முன்கூட்டியே வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இதையடுத்து 3வது முறையாக தேர்வு நடத்தப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் ஒரு பெண் போலீஸ்காரர் உள்ளிட்ட 8 பேரை அவர்கள் கைது செய்துள்ளனர்.
நேற்று இரவு கைது செய்யப்பட்ட 8 பேரும் சென்னை முதன்மை அமர்வு நீதிபதி பெரிய கருப்பையாவின் வீட்டில் இன்று ஆஜர்படுத்தப்பட்டு, போலீஸ் காவலில் எடுக்கப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
Story first published: Saturday, March 4, 2006, 5:30 [IST]