For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திமுக மாநாட்டில் நிருபர்கள் மீது வெறி தாக்குதல்

By Staff
Google Oneindia Tamil News

திருச்சி:

திருச்சியில் நடைபெறும் திமுக மாநில மாநாட்டு வளாகத்தில் வைக்கப்பட்டிருந்தவைகோவின் கட் அவுட்டை அகற்றுவதை படம் பிடித்த பத்திரிக்கைபுகைப்படக்காரர்கள் மீது திமுக தொண்டர்கள் வெறித்தனமாக தாக்குதல் நடத்தினர்.இதில் 10 புகைப்படக்காரர்கள் காயமடைந்தனர்.

திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த வைகோ இன்று காலை கூட்டணியிலிருந்துவிலகி அதிக கூட்டணிக்கு மாறி விட்டார். இது திருச்சியில் நடைபெற்று வரும் திமுகமாநில மாநாட்டில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

ஜெயலலிதாவை வைகோ சந்தித்த தகவல் கிடைத்ததும், திமுக தொண்டர்கள்திரண்டனர். மாநாட்டு வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த வைகோவின் கட் அவுட்டைஅகற்றினர். மதிமுக கொடிகள், பேனர்களும் அகற்றப்பட்டன.

இதைப் பார்த்த பத்திரிக்கைப் புகைப்படக்காரர்கள், தொலைக்காட்சி கேமராமேன்கள்அங்கு விரைந்து சென்று படம் பிடித்தனர். இதைப் பார்த்ததும் திமுகவினர்கொந்தளிப்படைந்தனர்.

எல்லாவற்றிற்கும் இவர்கள்தான் காரணம் என்று ஆவேசமாக கூறியபடிபத்திரிக்கையாளர்களை சரமாரியாக தாக்கத் தொடங்கினர்.

மிகுந்த வெறியோடு நடந்த இந்தத் தாக்குதலில் சிக்கி 10 புகைப்படக்காரர்கள்காயமடைந்தனர்.

இதையடுத்து அவர்கள் ஓடிச் சென்று மாநாட்டு வளாகத்தில் தற்காலிகமாகஅலுவலகம் அமைத்திருந்த தமிழ் நாளிதழ் ஒன்றில் நுழைந்து தஞ்சமடைந்து உயிர்தப்பினர்.

திமுகவினரின் தாக்குதல் குறித்து கேள்விப்பட்ட மாநாட்டு வரவேற்புக் குழுத் தலைவர்கே.என்.நேரு அங்கு விரைந்து வந்து தொண்டர்களை விலக்கி விட்டுஅமைதிப்படுத்தினார்.

மாநாட்டு வளாகத்தில் கூடுதல் போலீஸார் வரவழைக்கப்பட்டுபத்திரிக்கையாளர்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X