அதிமுக கூட்டணியில் தொடரும் தொகுதி சிக்கல்
சென்னை:
மதிமுக, விடுதலைச் சிறுத்தைகளுக்கு தொகுதிகள் ஒதுக்குவதில் அதிமுககூட்டணியில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது.
இந்தக் கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்குவதில் கடந்த ஒரு வார காலமாகவேமுடிவெடுக்க முடியாத அளவுக்கு கருத்து வேறுபாடுகள் தோன்றியுள்ளன.இதுவரை 5 சுற்று பேச்சவார்த்தை நடத்தியும் மதிமுகவும், திருமாவும் அதிமுக தரும்தொகுதிகளை ஏற்கத் தயாராக இல்லை என்று கூறிவிட்டனர்.
இந் நிலையில் திருமாவளவனை கடந்த இரு நாட்களாக அதிமுக தேர்தல் குழு பேசவரச் சொல்லி அழைத்தும் அவர் போகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தான் கட்சிப் பணியில் பிஸியாக இருப்பதாகச் சொல்லிவிட்டு வெளியூர்போய்விட்டார் திருமா.
அதே போல மதிமுக கேட்கும் தொகுதிகளை தருவதிலும் அதிமுக ரொம்பவேயோசிக்கிறது. இதனால் அக் கட்சிக்கும் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கல்உருவாகியுள்ளது.
மேலும் தங்களை நெருக்க வைகோவும் திருமாவும் கூட்டணிக்குள் ஒரு தனிஅணியாக செயல்பட்டு வருவதாகவும் அதிமுக கோபத்தில் உள்ளது.
ஆனாலும் எதையும் வெளிக்காட்ட இயலாத நிலையில் இரு கட்சிகளுடனும் பேசிவருகிறது.
மதிமுக கேட்கும் தொகுதிகளில் 30 தொகுதிகளைத் தர அதிமுக தயாராக இல்லை.கேட்டதில் 5 மட்டுமே கிடைத்திருக்கிறது. இதனால் சிக்கல் பெரிதாகிவிட்டதால்,தமிழக தொகுதிகளை விட்டுவிட்டு முதலில் பாண்டிச்சேரி தொகுதிகளை ஒதுக்குவதுகுறித்து மதிமுகவிடம் அதிமுக பேசி வருகிறது.
இங்கு 2 தொகுதிகளில் மட்டுமே மதிமுக போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் இன்று விடுதலைச் சிறுத்தைகளுடன் இறுதிக் கட்ட ஆலோசனையில்அதிமுக ஈடுபடவுள்ளது. அப்போது திருமா கேட்கும் தொகுதிகளை விட்டுத் தந்துதொகுதிப் பட்டியலை அதிமுக இறுதி செய்யும் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications