2 சீட் கொடுத்தால் கூட்டணி: அரவாணிகள்
Subscribe to Oneindia Tamil
கடலூர்:
அரவாணிகளுக்கு 2 தொகுதிகள் கொடுக்கும் கட்சியுடன் கூட்டணி வைத்து, அந்தக்கட்சியின் வெற்றிக்காக கடுமையாக உழைப்போம் என்று அரவாணிகள் சங்கம்அறிவித்துள்ளது.
கடலூரில் மாவட்ட கூத்தாண்டவர் அரவாணி நலச் சங்கம் சார்பில் நடந்த கூட்டத்தில்அதன் தலைவர் பூங்கொடி பேசுகையில்,தமிழகம் முழுவதும் அரவாணிகளின் வாக்கு வங்கி பலமாக உள்ளது. அரவாணிகள்நிறைய கோரிக்கைகளை வைத்துள்ளனர்.
அந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றும் கட்சியுடன் நாங்கள் கூட்டணி வைப்போம்,அவர்களுக்கு ஆதரவாகவும் இருப்போம். அதேசமயம், எங்களுக்கு அந்தக் கட்சி 2தொகுதிகளைத் தர வேண்டும்.
அப்படித் தந்தால் அந்தக் கட்சியின் வெற்றிக்கா கடுமையாக உழைப்போம் என்றார்.
இந்தக் கோரிக்கை தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி,நடிகர் விஜயகாந்த் ஆகியோருக்கு கடிதம் எழுதியிருப்பதாகவும் பூங்கொடிதெரிவித்தார்.












Click it and Unblock the Notifications