For Daily Alerts
Just In
3 குழந்தைகளை கொன்று தந்தையும் தற்கொலை
திருநெல்வேலி:
மனைவியுடன் ஏற்பட்ட தகராறில், தனது 3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துக்கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார் தந்தை.
நெல்லை, பாளையங்கோட்டை அருகே உள்ள பொட்டல் நகர் பகுதியைச் சேர்ந்தவர்குமரேசன். கூலித் தொழிலாளியான இவருக்கும், மனைவிக்கும் இடையே தகராறுஏற்பட்டது.இதனால் கோபமடைந்த குமரேசன், தனது குழந்தைகள் சங்கரேஸ்வரி, மாரியம்மாள்மற்றும் சுடலை ஆகியோரை அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றுஅனைவருக்கும் விஷத்தைக் கொடுத்து விட்டு தானும் அதைச் சாப்பிட்டார்.
சிறிது நேரத்திலேயே சுடலை இறந்த விட மற்ற 3 பேரும் கவலைக்கிடமான நிலையில்அக்கம் பக்கத்தினரால் கண்டுபிடிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி குமரேசனும் மற்றவர்களும் சிறிது நேரத்திலேயேஇறந்தனர்.
இந்த துயரச் சம்பவம் குறித்து சீவலப்பேரி போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.
Comments
Story first published: Sunday, March 19, 2006, 5:30 [IST]