தோழமை கட்சிக்கு தோற்கும் தொகுதி தரும் ஜெ
சென்னை:
அதிமுகவில் தொகுதிகள் ஒதுக்கீடு எப்படி நடக்கிறது என்பது குறித்து திமுக தலைவர்கருணாநிதி தனக்கே உரிய பாணியில் விளக்கம் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக முரசொலியில் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் அளித்துள்ள பதிலில்:அதிமுக அணியில் தொகுதிகள் ஒதுக்கீடு குறித்து சில தகவல்கள் கிடைத்துள்ளன.அதாவது வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் அனைத்தையும் அதிமுகவே எடுத்துக்கொள்கிறது. வெற்றி வாய்ப்பில்லாத, வெற்றி பெறவே வழி இல்லாத தொகுதிகளைதோழமைக் கட்சிகள் என்ற பெயரில் கூட்டு சேர்த்துக் கொண்டுள்ள கட்சிகளுக்குஒதுக்கி வருகிறார்கள்.
தோல்வி அடையப் போகும் தொகுதிகளை யாருக்காவது ஒதுக்க வேண்டுமேஎன்பதற்காகவே ஏகப்பட்ட கட்சிகளை தோழமைக் கட்சிகள் என்ற பெயரில் சேர்த்துக்கொண்டு அணி அமைத்துள்ளார்கள் என்று செய்தி வந்துள்ளது.
ஆனால், திமுக அணியில் அப்படி இல்லை. தோழமைக் கட்சிகளுக்கு வெற்றிவாய்ப்புள்ள இடங்களின் பட்டியலை கேட்டுப் பெற்று, மற்றவர்கள் அந்தத்தொகுதிகளை கேட்கிறார்களா என்பதைப் பார்த்து, பிரச்சினை இல்லாத வகையில்,சுமூகமாக, திருப்தி ஏற்படும் வகையில் தொகுதிகளை ஒதுக்கி வருகிறோம்.
முஸ்லீம் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவருக்குக் கூட அமைச்சரவையில் இடம் தராதவர்ஜெயலலிதா. அப்படிப்பட்ட ஜெயலலிதாவை, அந்த சமுதாயத்தைச் சேர்ந்த சிலர்சந்தித்து ஆதரவு தரப் போவதாக கூறுகிறார்கள்.
ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தையும் காட்டு என்பதற்கேற்ப இது இருக்கிறதுஎன்று கூறியுள்ளார் கருணாநிதி.
அமைச்சர் தளவாய் சுந்தரம் மீது பெண் டாக்டர் கோமதி சுமத்திய பாலியல்குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்று நீதிபதி மருதமுத்து கமிஷன் தெரிவித்துள்ளதேஎன்ற மற்றொரு கேள்விக்கு, வேலிக்கு ஓணான் சாட்சி என்று பதில் கூறியுள்ளார்கருணாநிதி.