For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நீதிமன்ற வளாகங்களில் அரசியலுக்கு தடை!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழகத்தில் உள்ள நீதிமன்ற வளாகங்களில் அரசியல் தொடர்பான எந்தநிகழ்ச்சியையும் நடத்தக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

சென்னையைச் சேர்ந்த வெங்கட்ராமன் என்ற வழக்கறிஞர் இதுதொடர்பாக பொதுநலன் மனு ஒன்றை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

அதில், சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் அரசியல் தொடர்பான நிகழ்ச்சிகள் அதிகஅளவில் நடைபெறுகின்றன. அரசியல் கட்சித் தலைவர்களின் பிறந்த நாள் விழாக்கள்,கட்சிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள் தொடர்பானஆலோசனைக் கூட்டங்கள் என அரசியல் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

இதுதவிர அரசியல் நிகழ்ச்சிகள் குறித்த சுவரொட்டிகள், தட்டிகள், பேனர்களும் அதிகஅளவில் நீதிமன்ற வளாகத்தில் வைக்கப்படுகின்றன.

இதனால் உயர்நீதிமன்றத்தின் புனிதம், தனித்தன்மை கெடுகிறது. மக்களும் அதிருப்திஅடைகின்றனர். எனவே இதுபோன்ற அரசியல் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கவேண்டும் என்று கோரியிருந்தார்.

தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி பிரபா ஸ்ரீதேவா ஆகியோர் இந்த மனுவைவிசாரித்தனர்.

பின்னர், உயர்நீதிமன்ற வளாகத்தில் அரசியல் தொடர்பான எந்த நடவடிக்கைகளையும்மேற்கொள்ள நீதிபதிகள் தடை விதித்தனர். உயர்நீதிமன்றம் தவிர மதுரைஉயர்நீதிமன்றக் கிளை, பிற நீதிமன்றங்களிலும் இந்த உத்தரவு அமல்படுத்தப்படவேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்தத் தடை உத்தரவு முறையாக அமல்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்கசம்பந்தப்பட்ட நீதிமன்றங்களின் பதிவாளர்கள், காவல்துறை அதிகாரிகள் உறுதிசெய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X