என்கவுண்டர்: சென்னை அருகே ரவுடி சுட்டுக் கொலை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை கொரட்டூர் அருகே போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பிரபல ரவுடிசுட்டுக் கொல்லப்பட்டான்.
தமிழகம் முழுவதும் போலீஸார் ரவுடிகளை வளைத்துப் பிடித்து கைது செய்யத்தொடங்கியுள்ளனர். கடந்த 2 நாட்களில் மட்டும் தமிழகம் முழுவதும் 1000ரவுடிகளை போலீஸார் பிடித்துள்ளனர். சென்னையில் மட்டும் 300 பேர் வளைத்துப்பிடிக்கப்பட்டுள்ளனர்.இந்த நிலையில் இன்று அதிகாலை கொரட்டூரைச் சேர்ந்த நாகூர் மீரான் என்ற பிரபலரவுடியை போலீஸார் நாகனாகுப்பம் என்ற இடத்தில் வளைத்துப் பிடித்தனர்.அப்போது போலீஸாரின் பிடியிலிருந்து தப்ப நாகூர் மீரான் முயன்றான்.
போலீஸார் மீது நாட்டு வெடிகுண்டை வீசினான். ஆனால் அது வெடிக்கவில்லை.இதையடுத்து தற்காப்புக்காக போலீஸார் நாகூர் மீரானை சுட்டனர்.
இதில் நாகூர் மீரான் குண்டடிபட்டு இறந்தான். நாகூர் மீரான் மீது 15க்கும் மேற்பட்டகொலை, கொள்ளை வழக்குகள் உள்ளன என்று போலீஸார் தெரிவித்தனர். சம்பவம்நடந்த இடத்திற்கு மாநகர காவல்துறை ஆணையர் லத்திகா சரண் நேரில் சென்றுவிசாரணை நடத்திதனார்.












Click it and Unblock the Notifications