கருணாநிதியுடன் டி.சி.எஸ். நிர்வாகிகள் சந்திப்பு
சென்னை:
முதல்வர் கருணாநிதியை, டாடா கன்சல்டன்சி நிறுவன நிர்வாகிகள் இன்று சந்தித்துப்பேசினர்.
மத்திய அமைச்சர் தயாநிதி மாறனை சமீபத்தில் டாடா குழுத் தலைவர் ரத்தன் டாடாடெல்லியில் சந்தித்துப் பேசினார். அடுத்த நாள், சென்னைக்கு வந்த டாடா வீட்டு வசதிநிறுவன நிர்வாகிகள் தயாநிதி மாறனை சந்தித்து தமிழகத்தில் தொழில் முதலீடுகளைமேற்கொள்வது குறித்து ஆலோசனை நடத்தினர்.இந் நிலையில் இன்று டாடா குழுமத்தைச் சேர்ந்த டாடா கன்சல்டன்சி சர்வீஸஸ்நிறுவன தலைவர் ராமதுரை தலைமையில் அந் நிறுவன நிர்வாகிகள் முதல்வர்கருணாநிதியை அவரது அலுவலகத்தில் சந்தித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் ராமதுரை பேசுகையில்,
![]() |
தமிழகத்தில் டிசிஎஸ்சின் முதலீடுகளை அதிகரிப்பது தொடர்பாகவும் டிசிஎஸ்ஸைவிரிவாக்குவது தொடர்பாகவும் முதல்வருடன் ஆலோசித்தோம். தொடர்ந்துபேசுவோம் என்றார்.
இதேபோல, மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஏ.ஆர்.அந்துலேவும்முதல்வர் கருணாநிதியை தலைமைச் செயலகத்தில் இன்று சந்தித்தார். தனது நீண்டநாள் நண்பரான கருணாநிதியை சந்திக்க வந்ததாக அந்துலே தெரிவித்தார்.
இந்தியாவுக்கான அமெரிக்க துணைத் தூதர் டேவிட் கூப்பரும் முதல்வரை இன்றுசந்தித்துப் பேசினார். மரியாதை நிமித்தமான சந்திப்பு இது என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.
நூலகங்களுக்கு 1000 பிரதிகள்:
இதற்கிடையே அரசு பொது நூலகங்களுக்கு வாங்கப்படும் நூல்களின் அளவை 1000பிரதிகளாக அதிகரிக்கமாறு முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழக அரசின் பொது நூலகத் துறையின் கீழ் இயங்கும் பொது நூலகங்களுக்குஆண்டுதோறும் நூல்கள் வாங்கப்படுகின்றன.
கடந்த மே மாதம் நடந்த சட்டசபைக் கூட்டத்தில், ஆளுநர் உரைக்கு நன்றிதெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்குப் பதில் அளித்து முதல்வர்பேசுகையில், நூலகங்களில் வாங்கப்படுகின்ற புதிய நூல்களின் பிரதிகள் அதிகபட்சம்750 படிகள்தான் வாங்கப்படுகின்றன.
இதற்குப் பதில் இனிமேல் குறைந்தபட்சம் 1000 படிகள் வாங்கப்படும் என்றுஅறிவித்திருந்தார்.
அந்த அறிவிப்பின்படி, நூலக ஆணைக்குழுவின் நிதி நிலைக் கேற்ப, வாசகர்களின்பயன்பாட்டை அடிப்படையாகக் கொண்டு பொது நூலகங்களுக்கு வாங்கப்படும்நூல்களின் எண்ணிக்கையை குறைந்தபட்சம் ஆயிரம் பிரதிகள் என்று உயர்த்திமுதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
3ம் தேதி முதல் இந்த உத்தரவு அமலுக்கு வருகிறது என்று கூறப்பட்டுள்ளது.













Click it and Unblock the Notifications