புதுவை உள்ளாட்சி தேர்தல்: காங்-திமுக வெற்றிகாரைக்காலில் தேமுதிக வெற்றி,அதிமுக தோல்வி
பாண்டிச்சேரி:
புதுவை உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ்-திமுக கூட்டணிக்கு வெற்றிகிடைத்துள்ளது. அதிமுக இந்தத் தேர்தலில் படு தோல்வி அடைந்துள்ளது.
திமுக-காங்கிரஸ் கூட்டணி 4 நகராட்சித் தலைவர் பதவிகளைக் கைப்பற்றியுள்ளது.காரைக்கால் நகராட்சித் தலைவர் தேர்தலில் தேமுதிகவின் பிரபாவதி வெற்றிபெற்றுள்ளார்.பாண்டிச்சேரி மாநிலத்தில் 38 ஆண்டுகளுக்குப் பின்னர் உள்ளாட்சித் தேர்தல்நடந்துள்ளது.
இதில் புதுவை நகராட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட திமுக வேட்பாளர்டாக்டர் ஸ்ரீதேவி வெற்றி பெற்றார்.
ஏனாம் நகராட்சித் தலைவர் பதவிக்கு காங்கிரஸ் கட்சியின் ஷகீலா தேர்வுசெய்யப்பட்டார். மாஹே நகராட்சித் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் ரமேஷ்பரம்பத் வெற்றி பெற்றார். உழவர் கரையில், காங்கிரஸ் வேட்பாளர் ஜெயபால்வெற்றி பெற்றார்.
காரைக்கால் நகராட்சித் தலைவர் பதவியை தேமுதிக வேட்பாளர் பிரபாவதிகைப்பற்றியுள்ளார். இவர் முன்பு காங்கிரஸில் டிக்கெட் கேட்டிருந்தார். அதுகிடைக்காததால் விஜயகாந்த் கட்சியில் வந்து சேர்ந்தார். தற்போது தலைவர் தேர்தலில்வெற்றி பெற்றுள்ளார்.
உள்ளாட்சித் தேர்தலில் முதல் முறையாகப் போட்டியிடும் தேமுதிக, முக்கியமானகாரைக்கால் நகராட்சியை கைப்பற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும்காரைக்காலில் வார்டு கவுன்சிலர் தேர்தலில் பெரும்பாலானவற்றில் காங்கிரஸ்,திமுகவே வெற்றி பெற்றுள்ளன.
அதே போல புதுவை நகராட்சி வார்டு தேர்தலுக்கு நடந்த தேர்தலில் திமுக நான்குவார்டுகளையும், அதிமுக மற்றும் புதுச்சேரி மக்கள் காங்கிரஸ் தலா 1 இடத்திலும்வெற்றி பெற்றுள்ளன.
உழவர்கரை நகராட்சி கவுன்சிலர் தேர்தலில் திமுக இரண்டிலும், காங்கிரஸ் மற்றும்சுயேச்சை ஆகியோர் தலா ஒரு இடத்திலும் வென்றுள்ளனர். இந்த நகராட்சியின்நான்கு வார்டுகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டியின்றி ஏற்கனவே வெற்றிபெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தேர்தலில் அதிமுக மற்றும் கண்ணனின் புதுச்சேரி மக்கள் காங்கிரஸ் கட்சிகளுக்குபெரும் தோல்வி கிடைத்துள்ளது.












Click it and Unblock the Notifications