நுழைவு தேர்வு ரத்து-ஆலோசனை கூற குழு!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தொழிற் கல்விக்கான நுழைவுத் தேர்வை ரத்து செய்வது தொடர்பாக அரசுக்குஆலோசனை கூற 7 பேர் கொண்ட குழுவை முதல்வர் கருணாநிதி அமைத்துள்ளார்.
மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழிற்படிப்புக்கான நுழைவுத் தேர்வை அடுத்தஆண்டு முதல் ரத்து செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.இந் நிலையில் இந்த முடிவை அமல்படுத்துவதற்குத் தேவையான ஆலோசனைகளைதமிழக அரசுக்கு தெரிவிக்க நிபுணர் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் துணைவேந்தர் அனந்தகிருஷ்ணன் இக்குழுவின் தலைவராகஅறிவிக்கப்பட்டுள்ளார். அவர் தவிர தங்கமுத்து, பார்த்தசாரதி, சட்டத்துறைச்செயலாளர், உயர் கல்வித்துறை செயலாளர், நல்வாழ்வுத்துறை செயலாளர் ஆகியோர்உறுப்பினர்களாக இருப்பர்.
தொழில்நுட்பக் கல்வி ஆணையர் உறுப்பினர்-செயலாளராக இருப்பார் என்றுகருணாநிதி அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications