முருகன் இட்லிக் கடை அதிபர் திடீர் கைது!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பிரபலமான முருகன் இட்லிக் கடை அதிபர் சென்னையில் கைது செய்யப்பட்டார்.
மதுரையில் மிகவும் பிரபலமானது முருகன் இட்லிக் கடை. இக்கடையில் வெறும்இட்லி மட்டுமே விற்கப்படுவது இதன் சிறப்பு. இந்தக் கடையின் கிளைகள் பின்னர்சென்னையிலும் திறக்கப்பட்டன.சென்னையில் தி.நகர், பெசன்ட் நகர் உள்ளிட்ட இடங்களில் முருகன் இட்லிக்கடையின் கிளைகள் உள்ளன. பெசன்ட் நகர் கிளை கடற்கரையை ஒட்டிய இடத்தில்உள்ளது.
இந்தக் கடைக்கு திடீரென போலீஸார் வந்து சோதனை நடத்தினர். பின்னர் இட்லிக்கடை அதிபர் மனோகரன், மேற்பார்வையாளர் கண்ணன் ஆகியோரைக் கைது செய்துஅழைத்துச் சென்றனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மாநகராட்சியின் அனுமதி பெறாமல் கடையைநடத்தியதால்தான் மனோகரனை போலீஸார் கைது செய்ததாக கூறப்படுகிறது.
கடையில் இருந்த காஸ் சிலிண்டர்களையும் போலீஸார் பறிமுதல் செய்து எடுத்துச்சென்றனர்.












Click it and Unblock the Notifications