2 கட்டமாக தமிழக உள்ளாட்சித் தேர்தல்?
காஞ்சிபுரம்:
தமிழக உள்ளாட்சித் தேர்தலை 2 கட்டமாக நடத்துவது குறித்து பரிசீலிக்கப்பட்டுவருவதாக தமிழக தேர்தல் ஆணையர் சந்திரசேகரன் கூறியுள்ளார்.
காஞ்சிபுரத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் ஆய்வுக் கூட்டத்தில் சந்திரசேகரன்கலந்து கொண்டார். மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் யாதவ் மற்றும் அதிகாரிகள்இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.பின்னர் நிருபர்களிடம் சந்திரசேகரன் பேசுகையில், தமிழக உள்ளாட்சித் தேர்தலை 2கட்டமாக நடத்துவது குறித்த திட்டம் ஆய்வில் உள்ளது. தற்போதைய உள்ளாட்சிமன்றங்களின் ஆயுட்காலம் அக்டோபர் 24ம் தேதியுடன் முடிகிறது.
எனவே அதற்கு முன்பாக தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு விடும்.
சட்டசபைத் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்காளர் பட்டியலை அடிப்படையாகவைத்து தேர்தல் நடத்தப்படும்.
தமிழகத்தில் மொத்தம் 12,618 ஊராட்சிகள், 385 ஊராட்சி ஒன்றியங்கள், 102நகராட்சிகள், 50 மூன்றாம் நிலை நகராட்சிகள், 501 சிறப்பு சிற்றூராட்சிகள், 6மாநகராட்சிகள் ஆகியவை உள்ளன.
மொத்தம் 1.40 லட்சம் பதவிகள் நிரப்பப்பட வேண்டும். தற்போதுள்ள மூன்றடுக்குமுறை உள்ளாட்சி அமைப்பு தொடரும்.
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மாநாடு வருகிற 25ம்தேதி சென்னையில் உள்ள தேர்தல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெறும் என்றார்சந்திரசேகரன்.












Click it and Unblock the Notifications