பழனிமாணிக்கம், வேங்கடபதிக்கு கல்தா?

Subscribe to Oneindia Tamil

சென்னை:

திமுகவைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர்கள் பழனிமாணிக்கம் மற்றும்வேங்கடபதி ஆகியோரின் பதவி பறிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

அவர்களுக்குப் பதில் கே.பி.கே.குமரன், கிருஷ்ணசாமி ஆகிய திமுக எம்.பிக்கள்அமைச்சர்களாக்கப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளாக மத்திய ஆட்சியில் பங்கேற்று அமைச்சர் பதவியைப் பெற்றுவரும் திமுகவுக்கு இந்த முறை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குகூட்டணி அரசில் மொத்தம் 7 அமைச்சர்கள் உள்ளனர்.

இவர்களில் 3 பேர் கேபினட் அமைச்சர்கள். 4 பேர் இணை அமைச்சர்கள்.டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், ராஜா ஆகியோர் கேபினட் அமைச்சர்கள்.

சுப்புலட்சுமி ஜெகதீசன், வேங்கடபதி, பழனிமாணிக்கம் உள்ளிட்ட 4 பேர் இணைஅமைச்சர்கள் ஆவர்.

இவர்களில் இருவரை நீக்க திமுக தலைமை முடிவு செய்துள்ளது. சட்டத்துறை இணைஅணைச்சர் வேங்கடபதி, நிதித்துறை இணை அமைச்சர் பழனிமாணிக்கம்ஆகியோர்தான் கல்தா கொடுக்கப்படவுள்ள அமைச்சர்கள்.

இருவரது செயல்பாடுகள் குறித்தும் பிரதமர் மன்மோகன் சிங் அதிருப்தியாகஇருப்பதாக கூறப்படுகிறது. மேலும், திமுக மேலிடம் இவர்கள் குறித்துஅதிருப்தியுடன்தான் உள்ளது.

சசிகலா குடும்பத்தினர் மீது பழனிமாணிக்கம் கடுமையான அணுகுமுறையைக்கடைப்பிடிக்கவில்லை என்று திமுக மேலிடம் கருதுகிறது.

குறிப்பாக சசிகலா குடும்பத்தினருக்குச் சொந்தமான மிடாஸ், மதுபானத்தொழிற்சாலையில் வருமான வரித்துறை சோதனை நடந்த விஷயத்தில், சசிகலாவுக்குஎதிரான வலுவான ஆதாரங்களைத் திரட்ட வருமான வரித்துறை தவறி விட்டதாகவும்,இதற்கு பழனிமாணிக்கத்தின் அணுகுமுறையே காரணம் எனவும் திமுக கருதுகிறது.இதனால் அவரைத் தூக்க முடிவு செய்துள்ளனர்.

இதேபோல வேங்கடபதியின் செயல்பாடுகளில் யாருக்குமே திருப்தி இல்லை என்றுகூறப்படுவதால் அவரையும் நீக்க முடிவு செய்யப்பட்டள்ளதாக தெரிகிறது.

இவர்களுக்குப் பதில் திமுக சார்பில் சமீபத்தில் ராஜ்யசபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டகே.பி.கே.குமரன் மற்றும் செ.குப்புசாமி அல்லது ஸ்ரீபெரும்புதூர் கிருஷ்ணசாமிஆகியோரில் ஒருவர் அமைச்சராககப்படக் கூடும் எனத் தெரிகிறது.

மத்திய அமைச்சரவையில் நாடார் சதாயத்தைச் சேர்ந்த யாரும் அமைச்சராக இல்லைஎன்ற குறை அச்சமுதாயத்தினர் மத்தியில் உள்ளது. இதையும் ஒரு காரணமாகக்கூறித்தான் சரத்குமார் திமுகவிலிருந்து விலகினார்.

நாடார் சமுதாயத்தினர் மத்தியில் நிலவும் அதிருப்தியைப் போக்கவும், தினகரன்நாளிதழை சன் டிவி குழுமம் வாங்கியதால் அச்சமுதாயத்தினர் மத்தியில் நிலவும்ஏமாற்றத்தையும் அகற்றும் பொருட்டு, கே.பி.கே.குமரனை மத்திய அமைச்சராக்கதிமுக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மத்திய அமைச்சரவை திருத்தி அமைக்கப்படும்போது இந்த அமைச்சர்கள் நியமனம்மேற்கொள்ளப்படும் எனத் தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+