பணிக்கர் நாடகம்-குட்டை உடைக்கும் உதவியாளர்

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி:

இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவதற்காகவே, நடிகை ஜெயமாலா மூலம்ஐயப்பன் கோவில் சர்ச்சையை அரங்கேற்றி ஆதாயம் தேட முயலுகிறார்உண்ணிகிருஷ்ண பணிக்கர் என்று அவரது முன்னாள் உதவியாளர் நாராயணன்தெரிவித்துள்ளார்.

ஜெயமாலா சொல்வது சுத்தப் பொய். கோவிலுக்குள் நுழைந்தது, சுவாமி சிலையைதொட்டது எல்லாமே உண்ணிகிருஷ்ண பணிக்கர் சொல்லிக் கொடுத்தது. அவர்போட்டுக் கொடுத்த சதித் திட்டத்தைத்தான் ஜெயமாலா இப்போதுஅமல்படுத்தியுள்ளார் என்று நாராயணன் தெரிவித்துள்ளார்.

நெல்லையில் உள்ள தனது வீட்டில் நாராயணன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,நான் மூன்று வருடம் பணிக்கரிடம் தனி உதவியாளராக இருந்தேன்.

பின்னர் என்னை கடந்த மாதம் பணியிலிருந்து நீக்கி விட்டார். மேலும், நாராயணன்பரப்பனங்காடியில் நான் வாங்கியிருந்த ரூ. 7 லட்சம் மதிப்புள்ள வீட்டையும், ரூ. 2லட்சம் மட்டும் கொடுத்து எழுதி வாங்கி விட்டார்.

ஜெயமாலா சொல்வது அனைத்துமே பொய். எல்லாமே பணிக்கரின் திட்டம்தான்.அதாவது அவருக்கு சபரிமலை கோவிலில் தேவபிரசன்னம் பார்க்க அனுமதிகொடுக்கப்படவில்லை. மேலும், முன்பு போல அவருக்கு கேரளாவில் செல்வாக்கும்இல்லை.

அவரை நம்பி ஆரூடம் கேட்ட பலரும் இப்போது விலகிச் செல்ல ஆரம்பித்துவிட்டனர். இதனால் விரக்தி அடைந்த பணிக்கர், இழந்த செல்வாக்கைப் பெறும்விதத்தில்தான் தான் கணித்தது போல நடந்து விட்டது பார்த்தீர்களா என்றுகாட்டுவதற்காகவே ஜெயமாலா மூலம் இப்படி ஒரு நாடகத்தை அரங்கேற்றியுள்ளார்.

ஜெயமாலாவை நான் பார்த்ததே இல்லை என்று பணிக்கர் கூறுவது பச்சைப் பொய்.கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் மொத்தம் 3 முறை இவர்கள் இருவரும்சந்தித்துள்ளனர். பெங்களூரில் இரண்டு முறையும், சென்னையில் ஒருமுறையும்இருவரும் சந்தித்தனர்.

அந்த சந்திப்பின்போது நானும் பணிக்கருடன்தான் இருந்தேன் என்று கூறியுள்ளார்நாராயணன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+