வருமான வரிவழக்கு: ஜெ-சசி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு
சென்னை:
வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் அவரது உயிர்த் தோழிசசிகலாவும் வரும் ஆகஸ்ட் 25ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த 1993-94ம் ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கை ஜெயலலிதாவும் சசிகலாவும் தாக்கல் செய்யவில்லை.அதே போல ஜெயலலிதாவும் சசிகலாவும் பார்ட்னர்களாக உள்ள சசி எண்டர்பிரைசஸ் நிறுவனம் 1991-92மற்றும் 92-93ம் ஆண்டுகளுக்கான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யவில்லை.இது தொடர்பாக இருவரும் மீதும் வருமான வரித்துறை வழக்குத் தொடர்ந்தது. ஆனால், இந்த வழக்கில் இருந்துவிடுவிக்கக் கோரி இருவரும் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
இந் நிலையில் இந்த மனு இன்று பொருளாதாரக் குற்றங்களுக்கான முதன்மை கூடுதல் தலைமைமெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இருவர் மீதும்குற்றச்சாட்டுகளை பதிவு செய்யுமாறு வருமான வரித்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கோரினார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ராஜ், வரும் ஆகஸ்ட் 25ம் தேதி ஜெயலலிதாவும் சசிகலாவும்நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications