திருட்டு வி.சி.டி.: பர்மா பஜாரில் லத்திகா சரண் அதிரடி சோதனை!
சென்னை:
சென்னை பர்மா பஜார் கடைகளில், திருட்டு விசிடிக்கள் விற்கப்படுகிறதா என்றுமாநகர காவல்துறை ஆணையர் லத்திகா சரணே நேரடியாக அதிரடி சோதனையில்ஈடுபட்டார்.
![]() |
விசிடிக்கள், மின்னணுப் பொருட்கள் அதிகம் விற்பனையாகிறது. அத்தோடு திருட்டுவிசிடிக்களும் முன்பு அதிக அளவில் விற்கப்பட்டு வந்தன. ஆனால் போலீஸார்நடத்திய தொடர் சோதனைகள் மற்றும் கெடுபிடிகள் காரணமாக திருட்டு விசிடிவிற்பனை அடியோடு குறைந்தது.
இருப்பினும் திருட்டு விசிடி விற்பனை தொடர்ந்து கொண்டு இருப்பதாகதிரையுலகினர் போலீஸில் அவ்வப்போது புகார் கூறி வருகின்றனர்.
இந் நிலையில், மாநகர காவல்துறை ஆணையர லத்திகா சரண் தலைமையில்போலீஸார் பர்மா பஜாரில் அதிரடி சோதனையில் இறங்கினர். கிட்டத்தட்ட 100போலீஸார் இந்த சோதனையில் ஈடுபடுத்தப்பட்டனர்.
மொத்தம் 250 கடைகளில் போலீஸார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். இதில்1,500 திருட்டு விசிடிக்கள் சிக்கின. 15 பேர் விசாரணைக்காக காவல்நிலையத்திற்குக்கொண்டு செல்லப்பட்டனர்.
இம்சை அரசன் 23ம் புலிகேசி, உயிர், உனக்கும் எனக்கும், தூத்துக்குடி உள்ளிட்டசமீபத்தில் வெளியான புதுப் படங்களின் திருட்டு விசிடிக்களை போலீஸார் பறிமுதல்செய்தனர்.
மாநகர காவல்துறை ஆணையரே பர்மா பஜாரில் நேரடியாக சோதனை நடத்துவதுஇதுவே முதல் முறையாகும். இதனால் அப்பகுதியில் பெரும் கூட்டம் கூடி விட்டது.
சாலையை அடைத்துக் கொண்டு மக்கள் ஆர்வத்துடன் ஆணையர் கடை கடையாகஇறங்கி ஏறி சோதனை நடத்துவதை பார்த்தனர். லத்திகா சரணுடன், கூடுதல் ஆணையர்ஜாங்கிட் மற்றும் துணை ஆணையர்களும் உடன் இருந்தனர்.













Click it and Unblock the Notifications