நடன இயக்குநர் புலியூர் சரேஜாவின் கணவர் கைது!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பிரபல நடன இயக்குநர் புலியூர் சரோஜாவின் கணவரும், ஏராளமான படங்களில் நடித்தவருமான நடிகர் சீனிவாசனைபோலீஸார் கைது செய்துள்ளனர்.
ஒரு காலத்தில் படு பிரபலமாக இருந்தவர் புலியூர் சரோஜா. கமல், ரஜினி உள்ளிட்ட அனைத்துப் பிரபல நடிகர், நடிகைளைஅந்தக்காலத்தில் ஆட்டு வித்தவர். இவரது கணவர் சீனிவாசன். இவர் ஒரு நடிகர். ஏராளமான படங்களில் வில்லனாகவும்,குணச்சித்திர பாத்திரத்திலும் நடித்துள்ளார்.இவர்களது ஒரே மகன் சில வருடங்களுக்கு முன்பு சாலை விபத்தில் இறந்து விட்டார். சரோஜாவும், சீனிவாசனும் சேர்ந்துராமாவரம் பகுதியில் சத்யா மெட்ரிகுலேஷன் பள்ளி என்ற பள்ளிக கூடத்தை நடத்தி வருகின்றனர்.
இந்தப் பள்ளிக்கூடத்தில் உள்ள கழிவு நீர்த் தொட்டியில் சுவாதிராஜன் என்ற 5 வயது சிறுவன் 2 நாட்களுக்கு முன்பு தவறிவிழுந்து இறந்தான். இது குறிதது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து கழிவு நீர்த்தொட்டியை மூடாமல் அஜாக்கிரதையாக இருந்ததாக கூறி பள்ளி நிர்வாகியான நடிகர் சீனிவாசனை போலீஸார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications