அடுத்த மாதம் முதல் கொச்சி-துபாய் கப்பல் சேவை
Subscribe to Oneindia Tamil
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கொச்சியிலிருந்து துபாய் வரையிலான சொகுசுக் கப்பல்போக்குவரத்து அடுத்த மாதம் தொடங்குகிறது.
கொச்சி துறைமுக பொறுப்புக் கழகம், துபாயில் உள்ள மார்கோ கப்பல் கழகம்இணைந்து இந்த கப்பல் போக்குவரத்தை மேற்கொள்ளவுள்ளன. தொடக்கத்தில் ஒருகப்பல் மட்டும் தனது சேவையை தொடங்குகிறது. பயணிகளின் வரவேற்பைப்பொருத்து இது அதிகரிக்கப்படும்.கொச்சியிலிருந்து துபாய் செல்ல 5 நாள் பயண நாட்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இதில் ஒரு பயணி அதிகபட்சம் 140கிலோ எடையுள்ள பொருட்களை உடன்கொண்டு செல்லலாம்.
இக்கப்பலில் குளிர்சாதன வசதி கொண்ட அறைகள், உணவகங்கள், குழந்தைகள்விளையாடும் இடம், உடற்பயிற்சி மையம் உள்ளிட்ட பல வசதிகள் உள்ளன.இந்தக்கப்பல் சேவை துபாயில் உள்ள மலையாளிகளுக்கு பெரும் உதவியாகஇருககும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications