கல்பாக்கத்தில் தொடரும் தீவிர கண்காணிப்பு
கல்பாக்கம்:
கல்பாக்கத்தில் தொடர்ந்து தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அணு மின்நிலையத்தை சுற்றி அனுமதியின்றி யாரும் நடமாட விதிக்கப்பட்ட தடை 20ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சுதந்திர தினத்தையொட்டி கல்பாக்கம் இந்திரா காந்தி அணு மின் நிலையத்தைதீவிரவாதிகள் தாக்கத் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை தந்த தகவலை தொடர்ந்துபலத்த பாதுகாப்பு வளையத்துக்குள் அணுமின் நிலையம் கொண்டு வரப்பட்டது.ராணுவம், பாரா மிலிட்டரிப் படைகள், தமிழக போலீசார், கமாண்டோக்கள் என சுமார்2,000 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அணு மின் நிலையத்தைசுற்றி ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.
மேலும் வான்வெளியில் ஹெலிகாப்டர்கள், கடற் பகுதியில் கடலோரப் பாதுகாப்புப்படை கப்பல்களும் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கல்பாக்கம் மற்றும் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் 200 மீட்டர் சுற்றளவுக்குஅனுமதியின்றி யாரும் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை 20ம் தேதிவரை இப்போது நீட்டிக்கப்பட்டுள்ளது.
கல்பாக்கத்துக்கு வரும் எல்லா வாகனங்களும் சோதனையிடப்படுகின்றன. 200மீட்டர் சுற்றளவுக்குள் எந்த வெளி வாகனும் அனுமதிக்கப்படவில்லை.
இது குறித்து மாமல்லபுரம் எஸ்பி செளந்திரராஜன் கூறுகையில், தீவிரமான பாதுகாப்புஏற்பாடுகளால் தீவிரவாதிகளின் சதித் திட்டம் முறியடிக்கப்பட்டுவிட்டது என்றார்.