For Daily Alerts
Just In
மாணவிகளிடம் சில்மிஷம்: வாத்தியார் பிரேமானந்தா கைது!
காரைக்குடி:
காரைக்குடி அருகே பள்ளி மாணவிகளிடம் பாலியல் சில்மிஷங்களில் ஈடுபட்டபள்ளித் தலைமை ஆசிரியரை போலீஸார் கைது செய்தனர்.
காரைக்குடி அருகே உள்ள புதுக்குடியிருப்பு என்றகிராமத்தில் பஞ்சாயத்துப் பள்ளிஉள்ளது. இங்கு பிரேமானந்தா என்பவர்தான் தலைமை ஆசிரியராக உள்ளார்.இங்கு நான்காவது, ஐந்தாவது வகுப்பு படிக்கும் மாணவிகளிடம் தலைமை ஆசிரியர்பிரேமானந்தா செக்ஸ் சில்மிஷங்களில் ஈடுபட்டு வந்தார். இது தொடர்பாகமாணவிகள் பெற்றோரிடம் புகார் கூறியுள்ளனர்.
இதையடுத்து பெற்றோர்கள் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கு புகார்அனுப்பினர். ஆனால் ஒரு நடவடிக்கையும் இல்லை.
இதையடுத்து காவல் நிலையத்தில் பிரேமானந்தா மீது புகார் கொடுக்கப்பட்டது.இந்தப் புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீஸார், தலைமை ஆசிரியர்பிரேமானந்தாவைக் கைது செய்தனர்.
காரைக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பிரேமானந்தாவை 15 நாள் காவலில்வைக்க நீதிபதி அழகேசன் உத்தரவிட்டார்.எல்லாம் பெயர் ராசி!
Story first published: Wednesday, August 16, 2006, 5:30 [IST]