மர்ம தேசத்தை கட் செய்த கைதி!
சேலம்:
சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதி தனது மர்ம உறுப்பை அறுத்துக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருட்டு வழக்கு தொடர்பாக சேலம் மத்திய சிறையில் ஒரு கைதிஅடைக்கப்பட்டுள்ளார். இவர் சமீபத்தில் சிறையில் உள்ள கேண்டீனில் வடைகேட்டுள்ளார். காசு கொடுத்தால்தான வடை என்று கேண்டீனில் இருந்தவர்கூறிவிட்டார்.கடனுக்கு தருமாறு கைதி கேட்டுள்ளார். தர முடியாது என கேண்டீன்காரர் மறுத்ததால்அவரும், சக கைதி ஒருவரும் சிறை சுவரின் மீது ஏறிக் கொண்டு கீழே குதித்துதற்கொலை செய்யப் போவதாக மிரட்ட ஆரம்பித்தனர்.
சிறைக் காவலர்கள் தலையிட்டு 5 மணி நேரம் சமாதானம் பேசி இருவரையும் கீழேஇறக்கினர். இந் நிலையில் வடை கேட்டு தகராறு செய்த கைதி மீண்டும் சிறைஊழியர்களுடன் தகராறு செய்துள்ளார்.
இதனால் கோபமடைந்த சிறை நிர்வாகம், அந்தக் கைதியை தனிமை சிறையில்அடைத்தது. இதையடுத்து அவரை சிறை ஊழியர்கள், நீ ஒரு மென்டல் என்று கேலிசெய்துள்ளனர்.
இதனால் விரக்தி அடைந்த அந்தக் கைதி கோபத்தில் பிளேடால் தனது மர்ம உறுப்பைஅறுத்துக கொண்டார். வலி தாங்க முடியாமல் அவர் போட்ட கூச்சலைக் கேட்டுஎல்லோரும் ஓடி வந்தனர்.
ரத்த வெள்ளத்தில் மிதந்த அவரை சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனைக்குக்கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. தையல்போட்டுள்ளார்களாம்.
இச் சம்பவம் குறித்து சிறை அதிகாரி ஒருவர் கூறுகையில், அந்தக் கைதி ஒரு சிறைப்பறவை. அடிக்கடி திருட்டு வழக்கில் சிக்கி உள்ளே வருவான். வந்தால் சும்மா இருக்கமாட்டான். ஏதாவது பிரச்சினை செய்து கொண்டே இருப்பான். கொஞ்ச நாட்களாகமர்ம உறுப்பை அறுத்து எறிகிறேன் பாருங்கள் என்று கூறி வந்தான். இப்போதுசொன்னதை செய்து விட்டான் என்றார்.












Click it and Unblock the Notifications