லாட்டரி-தடையை நீக்க தமிழக அரசு பரிசீலனை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
லாட்டரி விற்பனைக்கு விதிக்ப்பட்டுள்ள தடையை நீக்க தமிழக அரசு தீவிரமாகபரிசீலித்து வருகிறது.
தமிழக அரசு நடத்தி வந்த லாட்டரி, வெளி மாநில லாட்டரிகள் மற்றும் ஆன்லைன்லாட்டரிகளுக்கு 2003ம் ஆண்டில் அதிமுக ஆட்சியில் தடை விதிக்கப்பட்டது. இதைஎதிர்த்து லாட்டரி வியாபாரிகள் தொடர்ந்த வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடியாகிவிட்டன.ஆட்சி மாற்றத்திற்குப்பிறகு முதல்வர் கருணாநிதியை லாட்டரி வியாபாரிகள்சந்தித்துப் பேசினர். லாட்டரிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்றுகோரிக்கை வைத்தனர்.
இந் நிலையில் தனது தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள பல்வேறு திட்டங்களைநிறைவேற்ற தேவைப்படும் நிதியை லாட்டரி விற்பனை மூலமாக திரட்ட அரசுகருதுவதாகத் தெரிகிறது. இந்தத் தடையை நீக்கினால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 100கோடி வரை வருமானம் கிடைக்கும்.
இதனால் லாட்டரி மீதான தடையை நீக்க தமிழக அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது.ஆனால், லாட்டரி மீதான தடையை நீக்குவதை திமுகவின் முக்கிய கூட்டணிகட்சியான பாமக விரும்பவில்லை.
பாமகவை சமாதானப்படுத்திய பின்னர் தடை நீக்கப்படலாம் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications