ராகிங் செய்தால் 2 ஆண்டு சிறை-அண்ணா பல்கலை
சென்னை:
அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் ராகிங்கில் ஈடுபட்டால் 2 ஆண்டு சிறைதண்டனையும், ரூ. 10,000 அபராதமும் விதிக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
கல்லூரிகளில் முதலாண்டில் சேரும் மாணவர்களை சீனியர் மாணவர்கள் "ராகிங்என்ற பெயரில் துன்புறுத்தி வருவது வழக்கமாக உள்ளது. சில நேரம் இது எல்லை மீறிஉயிர்களையும் பறிக்கிறது.குறிப்பாக, விடுதிகளில் தங்கும் ஜூனியர் மாணவர்கள் படும்பாடு சொல்லி மாளாது.உடைகளை கழற்றி துன்புறுத்துவது உள்ளிட்ட அத்துமீறல்கள் நடந்து வருகின்றன.
ஆனால்,சில ஆண்டுகளுக்கு முன்பே இதை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்தது.ராகிங் செய்தால் கடும் தண்டனை வழங்கும் வகையில் சட்டம் கொண்டு வரப்பட்டது.இருப்பினும் கொடுமை நிற்கவில்லை.
இந் நிலையில் இந்தச் சட்டத்தின் அடிப்படையில் ராகிங் செய்வதற்கு தடை விதித்து,அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
கடந்த 97ம் ஆண்டு ராகிங் தடைச் சட்டத்தின்படி சத்தம் எழுப்புதல், ஒழுங்கற்றநடத்தை, உடலுக்கோ, மனதுக்கோ தீங்கு விளைவிக்கும் நடவடிக்கைகள், பயம்அல்லது அவமானத்தை ஏற்படுத்துதல், மாணவர்களுக்கு தர்மசங்கடத்தைஏற்படுத்துதல்,
சீண்டுதல், மாணவரை துன்புறுத்தும் வகையில் விளையாடுதல் அல்லது ஜோக்அடித்தல், ஒரு மாணவர் விரும்பாத ஒன்றை செய்து காட்டும்படி துன்புறுத்துதல்ஆகியவை ராகிங்காக கருதப்பட்டு முற்றிலுமாக தடை செய்யப்படுகிறது.
இத்தகைய செயல்களில் ஈடுபட்டால், 2 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ. 10,000ரூபாய் வரை அபராதம், கல்லூரியில் இருந்து உடனடியாக டிஸ்மிஸ், வேறு எந்தகல்லூரியிலும் சேர முடியாது ஆகிய தண்டனைகள் வழங்கப்படும்.
எனவே, அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் ராகிங்கில் ஈடுபடுவதைதவிர்க்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். அண்ணா பல்கலைக்கழகத்தில்ராகிங்கை தடுக்க கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் யாராவது ராகிங்கில் ஈடுபட்டால், உடனடியாக கண்காணிப்பு குழுவுக்குபுகார் தெரிவிக்கலாம். அதற்கான தொலைபேசி எண்: 22203285 மற்றும் செல்போன்எண் - 9841011089.
இவ்வாறு அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications