சிறுமிகளின் கண்களின் பூ மழை !!
தஞ்சாவூர்:
சிறுமியின கண்ணிலிருந்து பூ விழுவதாக பரவிய தகவலால் தஞ்சை மாவடடம்வலங்கைமானில் பரபரப்பு ஏறபட்டது.
நாடு முழுவதும் பிள்ளையார், கிருஷ்ணர், அம்மன் சிலைகள் பால்குடிப்பதாகவும்மும்பையில் தர்ஹாவுக்கு அருகே உள்ள கடல் நீர் குடிநீராக மாறிவிட்டதாகவும் நாடேஅல்லோகல்லப்பட்டு வரும் நிலையில் கண்ணில் பூ கதை கிளம்பியுள்ளது.வலங்கைமான் அருகே உள்ள இனாம்கினியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகந்நாதன்.இவருடைய 2வது மகள் கிருத்திகா. 10 வயதாகும் கிருத்திகாவின் கண்ணிலிருந்துகடந்த 2 மாதமாக மல்லிகைப் பூ விழுவதாக செய்தி பரவியது.
இதையடுத்து கிருத்திகாவின் பெரியம்மாவின் மகள் ரோஜாவின் கண்ணிலிருந்தும் பூவிழுவதாக செய்தி கிளம்பியது.
இதை முதலில் பொதுமக்கள் நம்பவில்லை. ஆனால் ஒன்றிரண்டாக பூ விழுந்த வந்தநிலை மாறி இப்போது பூ மழை பொழிவதாக செய்திகள் பரவியதால் ஏராளமானோர்கிருத்திகாவின் வீட்டை முற்றுகையிட்டு வருகின்றனர்.
கிருத்திகா, ரோஜா ஆகியோரி கண்களில் பூ விழுவது நிஜம்தான் என்று தினசரிஏராளானோர் இரு சிறுமிகளையும் பார்க்க வந்தவணணம் உள்ளனர். சிறுமிகளைவணங்கி பூக்கள் விழுவதைப் பார்த்து வணங்குகிறனர்.
சிறுமிகளுக்கு சூடம் காண்பித்தும், சாம்பிராணி காட்டியும் பய பக்தியுடன்கும்பிடுகின்றனர். இதனால் இனாம்கினியூர் கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.